அமெரிக்கன் கல்லூரி சி.எஸ்.ஐ. பேராயர் மெகா மோசடி

ஜூனியர் விகடனில் …
மதுரையை உலுக்கும் மெகா மோசடி…

அபேஸ் குற்றாச்சாட்டில் ஆசிர்!

”இதுபோன்ற நெருக்கடியான சூழலை நாம் முன்பு ஒருபோதும் சந்தித்ததில்லை. வேகமாகச் செயல்பட வேண்டிய தருணம். இது ஒரு போர்க்களம். இதில் வெற்றி பெற்றே தீருவோம்…”

– ஓர் அரசியல் தலைவரின் உணர்ச்சி முழக்கமல்ல இது… ‘என்னய்யா, இந்த சமாசாரம் உனக்கு தெரியாம போச்சேய்யா’ என்று நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவிடம் இருந்துதான் இப்படி அனல் வார்த்தைகள் தெறித்திருக்கின்றன.

புகழ்பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தைத் தனியாருக்கு விற்கப் போவதாகப் பரவிய தகவலையடுத்து, அதிர்ச்சியடைந்த அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கடந்த 16-ம் தேதி மாலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்தான் சாலமன் பாப்பையா இப்படி முழங்கினார். இவர் அந்தக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர்.

அமெரிக்கன் கல்லூரி 127 ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்கது. 1881-ல் ‘அமெரிக்கன் போர்ட் ஆஃப் கமிஷனர்ஸ் ஃபார் ஃபாரின் மிஷன்’ என்ற அமைப்பால் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது. இதன் சொத்துக்களை மதுரை
சி.எஸ்.ஐ. பேராயரான கிறிஸ்டோபர் ஆசிர், தனியா ருக்கு விற்க முயற்சிப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சாலமன் பாப்பையா, ”பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் தன்னிச்சையாக முடிவெடுத்து தன் மருமகன் தவமணி கிறிஸ்டோபரை கல்லூரியின் நிதிக் காப்பாளராக நியமித்துள்ளார். அவரை வைத்துக் கொண்டு பேராயர் நிறைய தவறுகளைச் செய்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்தக் கல்லூரியின் கையிருப்பாக இருந்த மூன்றே கால் கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இப்போது அதே தொகை கடனாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரி மைதானத்தை விற்க திட்டமிட்டுள்ளனர். உயிரே போனாலும் சரி… கல்லூரியின் ஒரு அங்குலத்தைக்கூட விற்க அனுமதிக்க மாட்டோம்…” என்று அனல் பறக்கப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டத்திலேயே ‘அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டி’ உருவாக்கப்பட்டது. கமிட்டி தலைவராக சாலமன் பாப்பையாவும் நிர்வாகிகளாக அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்கள் வின்ஃப்ரட், பார்த்தசாரதி, வசந்தன், ‘பீப்பிள்ஸ் வாட்ச்’ இயக்குநர் ஹென்றி டிஃபேன் ஆகியோரும் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் பேசிய ஹென்றி டிஃபேன், ”மதுரையில் பல்வேறு வகையிலும் செல்வாக்கு பெற்ற ஒரு கும்பலோடு கைகோத்துக் கொண்டு பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர், அமெரிக்கன் கல்லூரி யைக் கூறுபோட்டு விற்க முயல்கிறார். இந்தக் கல்லூரியின் ஒரு சென்ட் நிலம் அந்தக் கும்பலிடம் சென்றுவிட்டாலும் மதுரையிலுள்ள புகழ்பெற்ற அத்தனை பொதுச் சொத்துக் களையும் அந்தக் கும்பல் அபகரிக்கத் தயங்காது. மக்கள் சக்தியைத் திரட்டி இதை நாம் தடுத்தாகவேண்டும்…” என்றார் காட்டமாக.

முன்னாள் பேராசிரியர் வின்ஃப்ரட் பேசும்போது, ”கல்லூரியின் முதல்வராகவும், செயலாளராகவும் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் இருக்கிறார். கல்லூரியின் சொத்துக்களை விற்க வேண்டுமானால் இவருடைய ஒப்புதல் தேவை. ஆனால், சொத்தை விற்க அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரை நீக்கினால் சொத்துக்களை எளிதாக விற்று விடலாம் என்று பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் மனக்கணக்குப் போடுகிறார். இதனால் அவர் கடந்த 12-ம் தேதி கல்லூரி முதல்வர் இல்லாத நேரமாகப் பார்த்து தன்னுடைய மருமகனையும் துணை முதல்வர் ஜார்ஜ் செல்வக்குமாரையும் ஏவிவிட்டு போலீஸாரையும் கல்லூரிக்குள் வரவழைத்து முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போட்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மற்ற முன்னாள் பேராசிரியர்களான பார்த்தசாரதியும் வசந்தனும், ”இம்மாதம் 19-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தில் 100 சதவிகிதம் கிறிஸ்துவர்கள் மட்டுமே இருக்கும்படியான ஒரு குழு அமைத்து கல்லூரியை மதுரை-ராமநாதபுரம் திருமண்டலத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் பேராயர். அதே நாளில் நாமும் மதுரை தல்லாகுளத்தில் இந்த சூழ்ச்சியை மக்களிடம் விளக்கும் விதமாகக் கூட்டம் நடத்துவோம்” என்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாரிடம் பேசினோம். ”பேராயர் என்பவர் இந்தக் கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுவில் ஒரு கௌரவப் பதவியில் இருப்பவர் மட்டுமே. ஆனால், அவர் தன்னைக் கல்லூரியின் உயர் பொறுப்பில் இருப்பவர் போலவும், அதிகாரம் மிக்கவர் போலவும் நினைத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு, கல்லூரியின் சொத்துக்களை விற்க முயல்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றார்.
பேராயர் கிறிஸ்டோபர் ஆசிரிடம் அவருடைய மொபைல் போனில் தொடர்புகொண்டு பேசினோம். ”நான் பேராயராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு பி.எட். கல்லூரிகள், ஒரு நர்ஸிங் கல்லூரி, ஒரு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை ஏற்படுத்தியிருக்கிறேன். இப்படிப் புதிய சொத்துக்களை உருவாக்கும் நான், இருக்கும் சொத்துக்களை விற்பேனா..? அதுவுமில்லாமல் நிதி மற்றும் சொத்துப் பராமரிப்பு கமிட்டிக்குப் பொறுப்பானவர் முதல்வர்தான். சொத்துக்களை விற்க எனக்கு அதிகாரம் இல்லை. முதல்வரின் நிர்வாகச் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதுவரை அவர் கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டையே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் வெளிநாடு செல்ல விடுப்பு கேட்டார். ‘வெளிநாடு சென்று திரும்பும்வரை பொறுப்புகளைத் துணை முதல்வரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்றேன். அதற்குள் நான் சொத்துக்களை விற்க முயல்வதாகக் கற்பனையாக என் மீது குற்றம் சாட்டுகிறார். மற்றபடி, கல்லூரி முதல்வரின் அறைக்குப் பூட்டுப் போடப்பட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

இதற்கிடையே கல்லூரி முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், ‘தல்லாகுளம் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் பிரபாகரன் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்து, துணை முதல்வருடன் சேர்ந்துகொண்டு என் அறையைப் பூட்டினார்’ என்று போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் கொடுத்திருக்கிறார். முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொண்ட அமெரிக்கன் கல்லூரி பாதுகாப்பு கமிட்டியினர், ‘அரசியல்-அதிகார சக்திகளின் உதவியோடு அமெரிக்கன் கல்லூரியை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது. இதற்குப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர் உடந்தை. எனவே, எங்களுடன் இணைந்து கல்லூரியைக் காப்பாற்றுங்கள்’ என்று முக்கிய பிரமுகர்கள், கல்லூரி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்-களை அனுப்பிவருகின்றனர்.
Posted by தருமி

போலி ஆவணம் தயாரித்ததாக புகார்; பிஷப் உட்பட இருவர் மீது வழக்கு

http://saveamericancollege.blogspot.com/2009/02/18.html

மதுரை, பிப். 18: போலி ஆவணம் தயாரித்ததாக தமிழாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சி.எஸ்.ஐ.பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் உட்பட 2 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை பழங்கானத்தத்தை சேர்ந்த தமிழாசிரியர் தேவராஜ் அதிசயராஜ். இவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை பசுமலை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்த போது, பசுமலை சி.எஸ்.ஐ. சபை நிர்வாகக் குழு தேர்தல் முறை கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்தேன். இதனால் சி.எஸ்.ஐ. பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் என் மீது விரோதம் கொண்டார். என்னை ராமநாதபுரன் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசேகரனை தூண்டி விட்டு, பிஷப் எனக்கு தொல்லை கொடுத்தார்.

எனக்கு 22 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சேமநல நிதியிலிருந்து மருத்துவ தேவைக்காக பணம் எடுக்க விடவில்லை. 6-வது ஊதியக் குழு பாக்கி தொகையும் வட்டிப் பணமும் கிடைக்க விடாமல் செய்து விட்டனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் என் கையெழுத்தை அழித்தும், திருத்தியும் மோசடியாக போலி ஆவணம் தயாரித்து நஷ்டம் ஏற்படுத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், பிஷப் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கீழ் கோர்ட்டை அணுகி பரிகாரம் தேடிக்கொள்ள உத்தரவிட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதி மன்றத்தில் தேவராஜ் அதிசயராஜ் மனுத்தாக்கல் செய்தார்.

தேவராஜின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், பிஷப் கிறீஸ்டோபர் ஆசீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்துள்ளார்.

போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள்

[post+carg+conversion.jpg]

post+carg+conversion+1.jpg

கிறிஸ்தவர்கள் மதமாற்றுவதற்காக எதையும் செய்ய துணிவார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் அவ்வப்போதுதான் அவர்களின் மதமாற்ற மோசடிகள் பத்திரிகைகளில் அச்சேறி அம்பலமாகிறது. 7-10-2007 தினமலர் நாளிதழில் போஸ்ட் கார்டு மூலம் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. குறைந்த செலவில் அடித்தட்டு மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்காக அரசு மானியத்தில் போஸ்ட் கார்டுகள் அச்சிடப்படுகின்றன. ஆனால் இவற்றை கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். போஸ்ட் கார்டுக்கு அரசு மானியம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தங்களது மதமாற்ற வியபாரத்திற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம். இந்த தினமலர் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் மீது யாராவது வழக்கு தொடுத்தால் நல்லது

Stop Conversions

paa02.jpg?w=450

மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

ஏமாற்றி மதம்மாற்ற எத்துசெயும் குடிகேடர்
எவருக்கும் நாணமென்ப தில்லை! – அவர்
எவருக்கும் மானமென்ப தில்லை!
ஏமாற்ற வழிமாறி எரிதீயில் வீழுபவர்
எவருக்கும் அறிவேதும் இல்லை! – இவர்
இடர்களுக்கு முறிவேதும் இல்லை!

– அ. நம்பி

மருந்து தராமல் ஜெபம்: பெண் பலி : கிறிஸ்தவ அமைப்பு மீது புகார்

மே 07, 2010

mtm06ஈரோடு: தலைவலி நோயை பயன்படுத்தி கட்டாய மதம் மாற்றம் செய்த பெண், திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்துக்கு சென்று மர்மமான முறையில் இறந்ததாகவும், கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் கட்டாய மதம் மாற்றம் செய்வதாக கருங்கல்பாளையம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த நாகேந்திரன் (35), ஆயில் மில் தொழிலாளி. அவரது மனைவி சுமதி (28). அவர்களுக்கு ஆனந்தகுமார் (12), பொற்கொடி (10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமதி சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள ‘புது சிருஷ்டி சபை’ என்ற கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் சிலர், கமலா நகர் பகுதி மக்களிடம் மதம் மாறச் சொல்லி பிரசங்கம் செய்துள்ளனர். சுமதி தலைவலியால் அவதிப்படுவதை அறிந்த நிர்வாகிகள், அவரை சந்தித்தனர். ‘சபைக்கு வந்து ‘ஜெபம்’ செய்தால் உங்கள் நோய் குணமாகி விடும்’ என, கூறியுள்ளனர்.

சுமதியும் கச்சேரி வீதியில் உள்ள சபைக்கு சில வாரங்களாக சென்று ஜெபம் செய்துள்ளார். அமைப்பு நிர்வாகிகள், பல்வேறு இடங்களில் நடக்கும் ஜெப கூட்டத்துக்கு சுமதியை அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பத்தூரில் ஜெப கூட்டத்துக்காக சுமதி, தன் குழந்தைகள் மற்றும் உறவினர் பெண் ஒருவருடன் சென்றுள்ளார்.

ஜெபக்கூட்டத்தில் இருந்த சுமதிக்கு நேற்று முன்தினம் காலை திடீரென தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பாதிரியார், சுமதியின் தலையில் கை வைத்து ஜெபம் செய்து, ‘சிறிது நேரத்தில் சரியாகி விடும்’ என, கூறியுள்ளார். ஆனால், சுமதி திடீரென இறந்து விட்டார். மாத்திரை சாப்பிட அனுமதிக்காமல், ஜெபம் செய்ததால் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் செய்துள்ளார்.

சுமதியுடன் சென்ற உறவினர் பெண் கூறியதாவது: சுமதிக்கு அடிக்கடி தலைவலி வரும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தினசரி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். புது சிருஷ்டி சபையை சேர்ந்த நிர்வாகிகள், ‘சுமதிக்கு நோய் சரியாகி விடும்’ என கூறி கட்டாய மதம் மாற்றினர். அதைத்தொடர்ந்து ஜெப கூட்டங்களில் சுமதி கலந்து கொண்டார். திருப்பத்தூரில் நடந்த ஜெப கூட்டத்தில் கலந்து கொள்ள சுமதி மற்றும் அவரது குழந்தைகளுடன் சென்றிருந்தேன். நேற்று (நேற்று முன்தினம்) காலை ஜெப கூட்டம் நடந்தபோது, சுமதிக்கு தலைவலி ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள பாதிரியாரிடம் கூறினேன். அவர், ‘சுமதிக்கு ‘பேய்’ பிடித்துள்ளது. ஜெபம் செய்தால் போய்விடும்’ எனக் கூறி, சுமதி தலையில் கை வைத்து ஜெபித்து விட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் சுமதிக்கு அதிகளவில் வலி ஏற்பட்டது. ‘மாத்திரை கொடுக்கலாம்’ என, பாதிரியாரிடம் கேட்டபோது, அவர் மறுத்து விட்டார். தலைவலி அதிகமாகி மயங்கி விட்டார். ஜெப கூட்ட நிர்வாகிகள் ஆம்புலன்ஸ் மூலம் எங்களை அனுப்பி வைத்தனர். வரும் வழியில் சுமதி இறந்து விட்டார். ஆம்புலன்ஸில் ஜெப கூட்டத்தை சேர்ந்த மூன்று பேர் வந்தனர். வெப்படை அருகே இருவரும், ஈரோட்டில் ஒருவரும் இறங்கி விட்டனர். நாங்கள் மட்டுமே வீட்டுக்கு வந்தோம். மாத்திரை சாப்பிட அனுமதித்திருந்தால் சுமதி இறந்திருக்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினர்.

கமலா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், ”கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்த சிலர் தினசரி வந்து, கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்துகின்றனர். மதம் மாறினால் பல நன்மை ஏற்படும் என பிரசங்கம் செய்கின்றனர்,” என்றனர். சுமதியின் உறவினர்கள் கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர். சுமதி சந்தேக மரணமடைந்ததாக நேற்று மாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு அருகே சொட்டையம்பாளையத்தில் ஏப்ரல் 25ம் தேதி தாசில்தார் உள்பட ஆறு பேர் கொண்ட கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கட்டாய மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த மக்கள் ஆறு பேரை சிறை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கருங்கல்பாளையத்தில் கட்டாய மதம் மாற்றம் செய்யும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. – செய்தி: இங்கு

மேலும் ஒரு செய்தி:

mmp01


மதமாற்றம்-நன்றி, போய் வாருங்கள்…!

APRIL 30, 2010

லகெங்கும் கிறிஸ்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக இளைய சமுதாயத்தைக் கிறிஸ்தவர்களாக்குவதற்குப் பெரிதும் முயன்று வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் இரண்டு சமயங்களைப் பின்பற்றுவதால் குடும்பங்களுக்குள்ளே பிளவு ஏற்படுகின்றது.

sss04கிறிஸ்தவ சமூகம் இந்து இளைஞர்களை இந்து சமயத்தை மறுக்கவும் அதற்கு எதிராகப் பேசவும் தூண்டுகின்றது. இந்துக்களோ கிறிஸ்தவர்களை சகித்துக்கொள்கிறார்கள்; காரணம் எல்லா மார்க்கங்களும் நல்ல மார்க்கங்களே என இந்துக்கள் நம்புகின்றனர். உங்கள் குழந்தைகளின் மனம் சனாதன தர்மத்தின் உண்மைகள் நிரம்பியதாக இருக்கவேண்டும்.

இஸ்லாமிய மதம் இன்று உலகில் வெற்றிகரமான ஒரு மதமாக உள்ளது எவ்வாறு? காரணம் ஓர் இஸ்லாமியக் குழந்தை ஐந்து வயதாக இருக்கும்போதே தனது சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்கிறது. இந்த இளம் வயதிலேயே சமய நம்பிக்கைகள் அவர்களின் மனதில் நன்கு பதிந்து விடுகின்றன. அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் தமது சமயத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.

sss02உங்கள் குழந்தைகளுக்குச் சமயக் கருத்துகளைப் போதியுங்கள். நீங்கள் போதிப்பது உங்கள் குழந்தைகளுக்குப் புரிகிறதா இல்லையா எனக் கவலைப்பட வேண்டாம். குழந்தைகள் பெற்றோர்களின் செயல்களின் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தமது பெற்றோர்களின் செயல்களை நன்கு கவனிக்கிறார்கள். அவர்களால் சமய உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவற்றைக் கிரகித்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் சமய வாழ்க்கைக்கு உதாரணமாக இருக்கவேண்டும். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் உங்களிடம் தமது சமயத்தைப் போதிக்க வரும்போது `வணக்கம், எனக்கு எனது சமய உண்மைகள் யாவும் தெரியும்; நன்றி, நீங்கள் போய் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறக் கூடியதாக இருக்கும்.

சற்குரு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் (1927-2001)

கட்டாய மதம் மாற்றம்: கணவர் வீட்டார் மீது புகார்

திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார்.

Baptism Pictureதிண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர்.

baptism_8.jpgநீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

water baptism

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18314

கவுண்டமணி, கொசுத்தொல்லை, மதமாற்றம்…

!APRIL 26, 2010 by அ.நம்பி

ml01

சில கொசுக்கள்… மலேரியாவைப் பரப்பும்.

ml02

சில கொசுக்கள்… டெங்கியைப் பரப்பும்.

mm02

சில கொசுக்கள்… மதத்தைப் பரப்பும்!

mm04

விரிவான செய்தி: இங்கு

mm03

ml03

mm08

mm07

கோயமுத்தூர் CSI டையோசிஸ் முன்னாள் பிஷப்.மாணிக்கம் துரை அவர்கள் கைது

கோயமுத்தூர் பிஷப் Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள்மீது ஏராளமான வழக்குகள், பல நீதிமன்றங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது.

அதில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நடுவட்டம் என்ற இடத்திலுள்ள குருவானவர்Rev.கவிராஜ் என்பவர் தன்னை பிஷப்.துரை அவர்கள் கொலைமிரட்டல் விடுத்தாக புகார் தெரிவித்திருந்தார்.

கோவை சி.எஸ்.ஐ. முன்னாள் பிஷப் மாணிக்கம் துரையை அவரது வீட்டிலிருந்து
போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது எடுத்த படம்
சம்பவத்தின் காரணம்: கிறிஸ்டியன் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் சபை மக்கள் பிஷப்Rt.Rev.மாணிக்கம் துரை அவர்கள் டையோசிஸ் அறக்கட்டளை பணத்தில் மோசடி செய்ததாக புகார் அளித்து, பிஷப் அவர்களை கண்டித்து கூடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில்நடுவட்டம் CSI சபைகுருவானவர் Rev.கவிராஜ் அவர்களும் பங்கேற்றார். உண்ணாவிரத்துக்கு மறுநாள்பிஷப்.துரை அவர்கள் Rev.கவிராஜ் அவர்களை அழைத்து கண்டித்தார். அப்போது என்ன சம்பாஷனை நடந்தது என்பது தெரியாது அதன்பின் Rev.கவிராஜ் அவர்கள் பிஷப்.துரை தன்னை மிரட்டுகிறார் என்று போலீஸில் புகார் கொடுத்தார். அதைக்குறித்த வழக்கு கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிஷப்.துரை அவர்களுக்கு மூன்றுமுறை கோர்ட் சம்மன் அனுப்பியும் பிஷப் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து பிஷப்.துரையை கைது செய்ய பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கூடலூர் போலீஸ் அதிகாரி SI பசவராஜ் தலைமையில் போலீஸார் சனிக்கிழமை கோயமுத்தூர்பிஷப்.துரை அவர்களின் வீட்டுக்குசென்று கைது செய்து கூடலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு நீதிபதி அவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று அறிந்து பிஷப் அவர்களை ஊட்டியில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கும் நீதிமன்றம் கோடைகால விடுமுறையால் மூடப்பட்டிருந்தது. ஆகவே ஒரு வழியாக விடுமுறையிலிருந்த நீதிபதி அவர்களின் வீட்டுக்கே பிஷப்பை அழைத்து சென்றனர். பிஷப் அவர்கள் நீதிபதியிடம் தன்னை ஜெயிலுக்கு அனுப்பவேண்டாம் எனக்கு நெஞ்சுவலி என்று அறிவித்தார். அதனால் ஊட்டியில் உள்ள அரசு மருத்துமனையில் போலீஸ் காவலுடன் பிஷப் அவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பிஷப்.துரை அவர்கள்மீது ஏற்கனவே CSI டையோசிஸ் பணம் மூன்று கோடிகளை கையாடல் செய்ததாகவும் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாகவும் உள்ள குற்றச்சாட்டை CBCIDஅதிகாரிகள் பிஷப் அவர்களை விசாரிக்க அவரை கைது செய்ய இருந்தனர். ஆனால் பிஷப் அவர்கள் தன்னை கைது செய்யக்கூடாது என்று கூறி முன்ஜாமீன் பெற்றார். அதன்பின் தினசரி காலை CBCIDஆபீஸில் கையெழுத்துபோட வந்துபோய்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிஷப்.Rt.Rev.மாணிக்கம் துரை அவர்களுக்கு பதில் கோயமுத்தூர் டையோசிஸ் பணிகளை நிறைவேற்ற திருச்சி-தஞ்சை CSI டையோசிஸ் பிஷப்.Rt.Rev.பால் வசந்தகுமார்அவர்களை தற்காலிக பிஷப்பாக செயல்பட CSI சினாட் நியமித்தது. இந்த நிலையில் பிஷப் அவர்களோடு பண ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களான அமிர்தம், மனேசன் ஆகிய இருவரையும் CBCID போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து விசாரித்து கொண்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு போலீஸ் அப்ரூவராகமாறிக்கொண்டிருக்கின்றனர் என்று அறியப்படுகிறது. அதில் CSI குருவானவர்களும் உண்டு. பிஷப்அவர்கள் எங்கள் மேல் அதிகாரியாவர், ஆகவே அவர் கூறியபடி நாங்கள் கீழ்படிந்தோம் என்று கூறிபிஷப்புக்கு எதிராக சாட்சி கூற போலீஸ் அப்ரூவராக அவர்கள் மாறிவிட்டனர். இதுபிஷப்.Rt.Rev.துரை அவர்களுக்கு பெரும் பின்னடைவாகும்.

இப்போது கோயமுத்தூர் டையோசிஸ்க்கு புது பிஷப் தெரிந்தெடுக்கப்படவேண்டும் என்று பலர்CSI சினாடுக்கு எழுதி அறிவித்துள்ளனர் என்று கூறுகிறார்கள். புதிய பிஷப் தெரிந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுவதாக கேள்விப்படுகிறோம். பிஷப் மீதுள்ள வழக்கு நீண்டுபோகுமானால் CSIசினாட் கமிட்டியே ஒரு பிஷப்பை தாங்களே தெரிந்தெடுத்து கோயமுத்தூர் டையோசிஸ்க்காக நியமிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜாமக்காரன்: பிஷப் அவர்களைக்குறித்து நாம் இப்படி அறிவிப்பது வெறுப்பினாலோ, பகையினாலோ அல்ல. பிஷப் அவர்கள் கைது செய்யப்பட்டது நமக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியல்ல. CSIசபையின் தலைவன், நாடறியும் அவமானத்திற்குள்ளானதுதான் கர்த்தருக்கும், நமக்கும் மனவேதனையை கொடுக்கிறது.

பிஷப் அவர்களுக்கு தன்னை தற்பரிசோதனை செய்யவும், தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும், குறிப்பாக மனம் திரும்பவும் இது அவருக்கு தேவன் அனுமதித்த நல்ல சந்தர்ப்பம் ஆகும். இப்போது கூறும் இந்த ஆலோசனையை அவர் கவுரவப் பிரச்சனையாக கருதி அலட்சியப்படுத்தினால் பிஷப்அவர்களின் இருதயம் மீண்டும் முன்பைவிட கடினமாகிவிடும். வழக்கு இவருக்கு சாதகமாகி விடுதலை செய்யப்பட்டால் அவர் ஆத்துமா கர்த்தரைவிட்டு மிகதூரம் விலகிவிடும். அதன்பின் மீண்டும் பிஷப் தன் பதவியில் அமர்ந்தால் முன்பைவிட அவர் செயல்பாடுகள் மோசமாகி மீண்டும் பெரிய குற்றங்கள் புரியும் கடினமான நிலைக்கு தள்ளப்படுவார். பழிவாங்கும் சிந்தை மேலோங்கும் தவறுக்குமேல் தவறு செய்ய உந்தப்படுவார். அவர் ஆவிக்குரிய நிலை மிக மோசமாகிவிடும். துணிகர பாவம் செய்ய தெய்வபயம்அவர் இருதயத்திலிருந்து தானே நீங்கிப்போகும்.

ஆகவே பிஷப் அவர்கள் இப்போது செய்யவேண்டியது. கடைசிநேரத்தில் யார் எல்லாம் அப்ரூவராக மாறினார்கள் என்று அறிந்து, அவர்களின் செயலில் உண்மை உள்ளதா என்பதை பிஷப் அவர்கள் அறியவேண்டும். உண்மையான குற்றச்சாட்டுகளை கூச்சப்படாமல் சம்மதித்து பிஷப் அவர்கள் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். பணம் திருப்பி செலுத்த வேண்டியது உண்மைதான் என்றால் அதை திருப்பி செலுத்த தயங்கக்கூடாது. பிஷப் தன் பதவியை ஏற்றெடுக்கும்போது Chitfund கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததை நினைவு கூர்ந்து திருமண்டல பணப்பிரச்சனையை சரிப்படுத்திவிட்டால் அப்போதைய மனநிம்மதியையும், சமாதானத்தையும் பிஷப் அவர்கள் திரும்பப்பெறுவார். பாவத்தை மறைக்கிறவனுக்குதான் வாழ்வு இல்லை. ஆனால் அதை அறிக்கைசெய்து விட்டுவிட்டவனுக்கு தேவனுடைய கிருபைதானே அவன்மேல் வரும், அவன் குடும்பத்திலும் வந்துவிடும். நீதி 28:13.

தாவீது தன் தவறை உணர்ந்தபின் கர்த்தரின் கிருபை அவன்மேல் இறங்கி அவன் நிலையை கர்த்தர் எத்தனையாய் உயர்த்தினார். அவன் இழந்ததையெல்லாம் திரும்ப பெற்றுக்கொண்டான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் பிஷப்.துரை அவர்கள் பட்ட அவமானத்துக்கு ஈடாக வெற்றியையும், உயர்வையும், கௌரவத்தையும் தருவார். எந்த இடத்தில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே இடத்தில் கனப்படுத்தப்படுவார். மேலும் பிஷப். துரை அவர்களை சுற்றியுள்ள துதிபாடிகளையெல்லாம் இனம்கண்டு அவர்களை அகற்றி சரியான ஆலோசனை கொடுக்கும், ஜெபிக்கும் உண்மையான நண்பர்களை கண்டுபிடித்து அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

நானும் ஒரு ஊழியக்காரன் சேர்ந்தவன் என்ற நிலையில், நானும் பிஷப்.துரை அவர்களின் கீழ் இயங்கும் கோயமுத்தூர் திருமண்டலத்தில் நான் பிறந்து வளர்ந்து திருமண்டலத்துக்காக பாரப்படுபவன், உண்மையாக ஜெபிப்பவன் என்ற நிலையில் இந்த ஆலோசனைகளை உரிமையோடு எழுதுகிறேன்.பிஷப்.துரை அவர்களுக்கு என்னை ஆரம்ப முதலே பிடிக்காது என்பதை அறிவேன். ஆனாலும் என் சொந்த திருச்சபையின் தலைமை பொறுப்பிலுள்ளவர் என்ற நிலையில் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவருக்காக பாரத்துடன் ஜெபிப்பவன், ஜெபித்துக்கொண்டிருப்பவன் என்பதை என் கர்த்தருக்கு முன்பாக பாரத்துடன் அறிக்கையிட்டு இதை எழுதுகிறேன்.

கோவை திருமண்டல ஜாமக்காரன் வாசகர்களும் பிஷப்.துரை அவர்களுக்காக ஜெபியுங்கள்.

போலீஸ் விசாரணையில் கர்நாடகா CSI பிஷப்பும், CSI மாடரேட்டரின் ஊழலும்

சமீபத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட CSI மாடரேட்டரும்,கர்நாடகா(பெங்களுர்) பிஷப் Most Rev.S.வசந்தகுமார் அவர்களும் பண ஊழல் காரணமாக புகார் எழுந்துள்ளதால் பெங்களுர் நீதிமன்றம் பிஷப் அவர்களை விசாரிக்க போலீஸ்சுக்கு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் குற்றசாட்டில் உண்மையிருக்கிறது என்பதை அறிந்து கீழ்காணும் தண்டனை சட்டத்தில் பிஷப்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1). IPC 406 (Criminal Breach of Trust),
2). IPC 417, 420 Cheating
3). IPC 468 (Forgery for purpose of Cheating),
4). IPC 477 (Falsification of Accounts)

பெங்களுரில் மிகப் பிரசித்தி பெற்ற Hr. Secondary School – Bishop Cotton School ஆகும். இதில்பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியான பிரம்மாண்ட கட்டிடத்தில் அகன்ற நிலத்தில் இந்த பள்ளிக்கூடம் அமைந்திருக்கிறது. இதில் பிள்ளைகளுக்கு படிக்க இடம் கிடைப்பது கடினம். இத்தனை சிறப்பு வாய்ந்த கல்வி நிலையத்துக்கு தனி Bபோர்டும், Trustம் உண்டு. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவர் இந்த கல்வி நிலையங்களை மிகச் சிறப்பாக நிர்வகித்து கர்நாடகா மாநிலத்திலேயே சிறந்த பள்ளியாக பெருமை கொள்ளும் வகையில் பள்ளிகளை உயர்த்தினார்.

2002ம் ஆண்டு முதலே பிஷப்பும், இப்போதைய CSI மாடரேட்டருமான Most Rev.வசந்தகுமார்அவர்கள் இந்த பள்ளிக்கூட விஷயங்களில் ஆளுமை செய்ய முயன்று பிரச்சனைகள் முற்றி பள்ளிக்கூட நிர்வாகியான முன்ளாள் ராணுவ அதிகாரி அவர்கள் தன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார். அதன் காரணமாக பிஷப் அவர்கள் பொய்யான தஸ்தாவேஜிக்களை தயார் செய்தும், Boys – Girls High Schoolன் பணத்தை கொள்ளையடித்து பிஷப்பும், அவர் மனைவியும் இணைந்த ஒரு கணக்கை Residency Road Branch, Bangalore-ல் அமைந்துள்ள VIJAYA BANKல் அக்கவுண்ட் ஆரம்பித்து (A/C. No.6988) அதில் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. CSIயின் பணம் பலவிதத்தில் 2002ம் ஆண்டு முதலே கொள்ளையடித்திருப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.Bishop அக்கவுண்ட் நெம்பரான 118401010017030லும், பள்ளிக்கூடத்தின் பல லட்ச ரூபாய்களை இட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடாகா CSI டையோசிஸ்க்கான (KCD) பேங்க் அக்கவுண்ட் நெம்பர்.5613303164 இது பெங்களுரில் State Bank of India, Saurashtra Mission Road Branch-ல் உள்ளது. இந்த கணக்கில் சேரவேண்டிய CSIயின் பணம் பிஷப்பின் சொந்த கணக்கில் சேர்ந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளதாக அறியப்படுகிறது.

பல லட்சங்கள் பிஷப்பின் மகளின் பெயரில் உள்ள Credit Card-ல் சேர்த்த அதன் பில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெங்களுர் டையோசிஸ்ஸின் அனைத்து CSI பள்ளிகளின் தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியைகளுக்கும் பள்ளியிலிருந்தும் பல லட்சங்களை தன் சொந்த பெயரில் உள்ள அக்கவுண்ட்க்கு மாற்றி ஏற்பாடு செய்யும்படி எழுதிய கடிதங்கள் போன்ற பல ஆதாரங்கள் போலீஸ் கையில் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

ஜாமக்காரன்: CSI சபைகளுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் அவமானத்தை அறிந்தீர்களா? பல வருடங்களாக CSI மாடரேட்டரிலிருந்து, திருமண்டல பிஷப்மார்களில் பெரும்பான்மையோர் பெயரில் இப்படிப்பட்ட பணக்கொள்ளை, திருமண்டல சொத்துகொள்ளை, சபை காணிக்கை கொள்ளை, பள்ளிக்கூட பிள்ளைகளின் பணத்திலும் கொள்ளை இப்படி இது நீண்டு கொண்டேபோனால் CSIயின் நிலை என்ன ஆகும்? இவர்கள் எல்லாம் பதவி ஏற்றப்போது CSI டையோசிஸ்கள்மேல் இருந்த கடந்தகால களங்கம் இந்த புதிய தலைவர்களால் நீக்கப்படாதா என்ற எதிர்ப்பார்ப்பில் அவர்களை வாழ்த்தினோம், வரவேற்றோம். இவர்களுக்காக ஜெபித்தோம். ஆனால் இப்போது தலைகுனிகிறோம். CSIவிஷயத்தில் இன்னும் எத்தனை காலத்துக்கு தேவன் மௌனமாக இருப்பார் என்று தெரியவில்லை!
Thanks-http://www.jamakaran.com/tam/2010/june/avalanilai.htm

CSI டையோசிஸ்ஸிலும் பண ஊழல்

மெட்ராஸ் CSI டையோசிஸ்ஸிலும் பண ஊழல்
CSI பிஷப்.Rt.Rev.தேவசகாயம் அவர்களுக்கு 5 லட்சம் அபராதம்

CSI மிஷன் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ கருவிகள் இறக்குமதி செய்ததில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சுங்கதுறைபிஷப்.தேவசகாயம் அவர்களை 5 லட்சம் ரூபாய் அபாரதமாக செலுத்தும்படி அறிவித்துள்ளது.

சென்னை பிஷப்.தேவசகாயம் அவர்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதுதான் சென்னையில் உள்ள CSI கல்யாணி ஆஸ்பத்திரியும்,ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற ஊரில் உள்ள CSIஆஸ்பத்திரியுமாகும். இன்னும் சில இடத்தில் உள்ள CSI ஆஸ்பத்திரிகள் மெட்ராஸ் டையோசிஸ்க்கு உட்பட்டதாகும்.

ஏழைகளின் நலனுக்காக என்று வெளிநாட்டிலிருந்து பல தொண்டு நிறுவனங்கள் பல்வேறு ஆஸ்பத்திரி உபகரணங்களை இப்படிப்பட்ட மிஷன் ஆஸ்பத்திரிக்கு அனுப்புவது வழக்கம். அதன்படி World Medical Relief (WMR) என்ற அமெரிக்க நிறுவனம் நகரி என்ற ஊரில் உள்ளCSI ஆஸ்பத்திரிக்கு பல மருத்துவ கருவிகளை சில ஆண்டுகளுக்குமுன் கப்பலில் அனுப்பி வைத்தனர். இவற்றில் விலை உயர்ந்த பொருள்களான X-Ray, டயாலிசிஸ், ECG போன்ற கருவிகள், ஆப்ரேஷன் சம்பந்தமான பொருள்கள், சக்கர நாற்காலிகள், கட்டில்கள் மற்றும் முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல பொருள்கள் அனுப்பியதாக அறியப்படுகிறது.

இதை பெற்றுக்கொள்ள இந்த பொருள்களின் மதிப்பை சுங்கதுறையிடம் அறிவிக்கவேண்டும். அப்படி அறிவித்ததில் பொருளின் மதிப்பை குறைத்துகாட்டி குறைந்த வரி மட்டும் செலுத்தும் வகையில் மதிப்பீட்டை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஏற்கனவே நகரி CSI ஆஸ்பத்திரிக்கு வந்த பல பொருள்கள், உபகரணங்களை வெளி ஆஸ்பத்திரிக்கு கள்ளத்தனமாக விற்றதற்கான சில சாட்சிகளோடு சென்னை மேஜர்.விக்டர் அவர்கள்Laity Association of CSI என்ற கிறிஸ்தவ நலனுக்காக போராடும் சங்கத்தின் பொதுசெயலர் என்ற முறையில் மெட்ராஸ் டையோசிஸ்ஸிடமும், CSI சினாட் மாடரேட்டரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் CSI மிஷன் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்களை வாங்கும் விஷயத்தில் ஊழல் நடந்திருப்பதை வருவாய் புலனாய்வு துறையினர்அறிந்து விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சென்னை சுங்கதுறை கமிஷனர்.ராஜன்அவர்கள் நகரியில் உள்ள CSI மருத்துமனையின் நிர்வாகம் 1 கோடியே 34 லட்சத்தை அபராதமாக செலுத்தவேண்டும் என்றும் நகரி மிஷன் ஆஸ்பத்திரி பொறுப்பாளர் Dr.ராஜகுமாரி சுந்தர் அவர்களும், பிஷப்.தேவசகாயம் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் தனிப்பட்ட முறையில் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பளித்தது.

பிஷப்.தேவசகாயம் அவர்கள் பேரில் சுனாமி நிதி ஊழல் புகாரும் உண்டு என்று கேள்விப்படும் போது CSI சபைகளில் பண விஷயத்தில் இத்தனை பெரிய ஊழல் தொடர்கதையாக அமைந்துவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. சமீபத்தில்தான் CSI சினாட் முன்னாள் செயலாளர் Dr.திருமதி.பாலின்அவர்களையும், அவர் மகளையும் இன்னும் சிலரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.TVயில் பத்திரிக்கைகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரபல பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டபோது தென்னிந்திய திருச்சபை (CSI) விசுவாசிகளைப்பற்றி, சபை தலைவர்களைப்பற்றிஉலகம் என்ன நினைக்கும்? CSI அங்கத்தினர்கள் கண்ணீர்விட்டு ஜெபிப்போமா!

KodaikanalHead Master Molesting Children for 25 years caught

http://indianschristians.wordpress.com/?s=kodaikanal

HUNT ON FOR ABSCONDING MAN
Bhutanese girl accuses Kodaikanal school head of misbehaviour

TIMES NEWS NETWORK

Madurai: A 14-year-old Bhutanese girl,studying in class 9 in Kodaikanal Public School,has alleged that the 73-year-old principal sexually molested her while she was recouping in the sick room on June 13.
The school,situated in Kodaikanal town in Dindigul district,was established in 1982 and is reputed to be one of the best co-educational institutions in the region.
On June 15,on hearing the childs complaint,father Charles Samraj,a CSI priest in Yercaud,and the girls guardian,demanded that the school issue a transfer certificate for his ward.
Samraj also took the girl to the Kodaikanal police to lodge a complaint.According to sources,the principal,known only as Bright,even on the website of the school,had mentioned fee concessions to 17 students,who had been provided with boarding facilities in his living quarters.
Bright was in the habit of asking the children to watch television in the late evenings.The girl complained that on June 13,the principal,who had come to the sick room in the absence of other staff,had allegedly touched her inappropriately,sub-inspector of police Catherine Mary told The Times Of India.
The police have registered a case against Bright under IPC sections 294 (B),(use of obscene language) and 354 (assault or criminal force to woman with intent to outrage her modesty) and section 4 of the Women Harassment Act.
Bright is absconding and the police are on the lookout for him.
The girl also complained that the principal had demanded Rs 40,000 for handing over the TC.
timeschennai@timesgroup.com

CHENNAI: The 73-year-old correspondent of the reputed Kodaikanal Public School, M L Brite, is on the run, charged with the molestation of a Class IX student, who joined the residential school just over a month ago.

The 14-year-old, a citizen of Bhutan, was sexually molested by the 73-year-old correspondent, says the complaint filed with the Kodaikanal police by the student’s guardian.

Brite asked the girl to visit his room in her nightgown late in the night along with another girl on June 1. The other girl ignored the call but the new girl went ahead.

She was asked to serve coffee to Brite, who then allegedly misbehaved with her. When the girl refused to give in to his demands, Brite threatened her, using abusive language.

The frightened girl fell ill and she was admitted to hospital. The correspondent went to the hospital and when no one was around allegedly molested her. The girl called her guardian, who came and filed a police complaint on June 18.

The officer in charge of Kodaikanal Police Station told Express that preliminary investigations said that the educationist, running the school in the hill station for 27 years, had a history of harassing women, particularly teachers, for several decades, and at the Mother Teresa University, where he was a visiting lecturer. This was the first time a formal complaint had being lodged against him, the officer said.

KERALA Murder Suspect Jacobite Pastor Surrenders

A Jacobite Syrian priest, prime suspect in the murder of a Christian lay leader, has given himself up to a court in Kochi, India.

Father Varghese Thekkekara of the Jacobite Syrian Orthodox Church surrendered after a demand from the Kerala High Court. He was granted bail of 25,000 rupees (US $542) on his own recognizance and two sureties of the same amount.

Father Thekkekara was charged with conspiring to hire henchmen to murder Malankara Varghese, a management committee member from the rival Malankara Orthodox Church. Police have also accused 19 others, including criminal gang members, of the 2002 murder. The Jacobite Church suspended the priest upon his accusation.

It is thought that the murder was part of a long-running feud within the Syrian Malankara Church, which split into Jacobite and Orthodox factions
after a dispute over property and money, more than a century ago.

The Jacobite Syrian Orthodox Church recognizes the Patriarch of Antioch as its spiritual head while the Malankara Orthodox Church reveres a local prelate as its leader.

The two factions jointly own 1,026 churches across Kerala, their base. Since the split, each faction has tried repeatedly to gain control over the other’s domain.

Saramma Varghese, the victim’s widow, said she would not stop her fight for justice. I believe there is a wider conspiracy behind the murder,” she said. “I believe more church leaders are involved, including bishops.”

Source:  ucanews.com

http://www.cathnewsindia.com/2010/06/18/murder-suspect-priest-surrenders-to-court

Statewide child trafficking ring busted, 4 held

போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் குழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
குழந்தை கடத்தல்
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா அவரது கணவர் சிவா மற்றும் ராணி, அல்போன்ஸ் செல்வம், தனலட்சுமி, புதுவை மனித உரிமை கழக தலைவி லலிதா ஆகிய 7 பேரை கைது செய்தனர். ராணியை தவிர மற்ற அனைவரும் குண்டர் சட்டத்தின்கீழ் ஓர் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பலிடம் இருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மாதவரத்தில் கடத்தல்
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அன்று சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் தெருவை சேர்ந்த முரளிதரன்-கவிதா தம்பதிகளின் பெண்குழந்தைதான் கடத்தப்பட்ட குழந்தை ஆகும். அந்த குழந்தையின் பாட்டி அமுதா (வயது50) தடுப்பு ஊசி போடுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றார்.
தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து இறங்கும்போது அங்கு வந்த ஒரு மர்மப்பெண், குழந்தையை தூக்கி வருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று வெளியே இருந்த ஆட்டோவில் குழந்தையுடன் தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி முரளிதரன் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
பெண் பிடிபட்டார்
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனிவிஜயா மேற்பார்வையில், மாதவரம் உதவி கமிஷனர் லாயிட் சந்திரா, இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முனிசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப்பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாதவரம் அருகே சந்தேகப்படும்படி குழந்தையுடன் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தல்காரி
விசாரணையில் அவரது பெயர் நான்சி (வயது 28) என்பதும், சென்னை பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்ï முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும், இவர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
மேலும், நான்சியின் கையில் இருந்த 8 மாத குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்க எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்சி கைது செய்யப்பட்டார்.
மேலும் 3 பெண்கள் கைது
நான்சிக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயபிரசாத் என்பவரின் மனைவி ஆஷா (வயது30), ஆஷாவின் அக்கா கவிதா (35), உறவினர் ஆண்டாள் (45) ஆகிய மேலும் 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டது எப்படி என்று நான்சி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:-
கடத்தல் கும்பலுடன் தொடர்பு
எனக்கு திருமணம் நடந்த ஒரு மாதத்தில் எனது கணவர் கிறிஸ்டோபர் மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன்பிறகு தனிமையில் வாடிய எனக்கு அயனாவரத்தை சேர்ந்த ஜெயபிரசாத் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவி பெயர் ஆஷா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் புதுவையில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை வாங்கிவந்தார். ஆனால் அந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று ஆஷா கூறிவிட்டார். இதனால் அந்த குழந்தையை யாருக்காவது விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக குழந்தையை கொண்டு வந்தபோதுதான் போலீசில் மாட்டிக் கொண்டேன்.
ஜெயபிரசாத் குழந்தைகள் கடத்தல் கும்பலோடு ஏற்கனவே தொடர்பு வைத்து இருந்தார்.
ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றை கடத்தி வந்து ஜெயபிரசாத் சென்னை அயனாவரத்தை சேர்ந்த கவிதா, ஓட்டேரியை சேர்ந்த ஆண்டாள் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த அருள்மொழி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு நான்சி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
குழந்தைகள் மீட்பு
நான்சி வைத்திருந்த ஜோஷ்மியா என்ற 8 மாத பெண் குழந்தையும், காஞ்சீபுரத்தில் அருள்மொழி என்ற பெண்ணிடம் விற்பனை செய்த கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரண்டு குழந்தைகளும் யாருடைய குழந்தைகள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், போலீசாரால் தேடப்பட்ட ஜெயபிரசாத்தை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துவிட்டனர். ஏற்கனவே மாதவரம் தனியார் ஆஸ்பத்திரியில் திருட்டு போன பெண் குழந்தையை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைதான 4 பெண்களையும் திருவொற்றிïர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் அதிரடி வேட்டை தொடர்கிறதுகுழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைதுரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு

செங்குன்றம், ஜுன்.21-
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் குழந்தைகளை கடத்திய மேலும் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
குழந்தை கடத்தல்
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த கிரிஜா அவரது கணவர் சிவா மற்றும் ராணி, அல்போன்ஸ் செல்வம், தனலட்சுமி, புதுவை மனித உரிமை கழக தலைவி லலிதா ஆகிய 7 பேரை கைது செய்தனர். ராணியை தவிர மற்ற அனைவரும் குண்டர் சட்டத்தின்கீழ் ஓர் ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்த கும்பலிடம் இருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
மாதவரத்தில் கடத்தல்
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அன்று சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட் தெருவை சேர்ந்த முரளிதரன்-கவிதா தம்பதிகளின் பெண்குழந்தைதான் கடத்தப்பட்ட குழந்தை ஆகும். அந்த குழந்தையின் பாட்டி அமுதா (வயது50) தடுப்பு ஊசி போடுவதற்காக குழந்தையை எடுத்துச் சென்றார்.
தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து இறங்கும்போது அங்கு வந்த ஒரு மர்மப்பெண், குழந்தையை தூக்கி வருவதாக சொல்லி வாங்கிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று வெளியே இருந்த ஆட்டோவில் குழந்தையுடன் தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி முரளிதரன் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
பெண் பிடிபட்டார்
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில், மாதவரம் துணை கமிஷனர் ஆனிவிஜயா மேற்பார்வையில், மாதவரம் உதவி கமிஷனர் லாயிட் சந்திரா, இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, முனிசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், குழந்தையை கடத்திச் சென்ற மர்மப்பெண்ணை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாதவரம் அருகே சந்தேகப்படும்படி குழந்தையுடன் நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
கடத்தல்காரி
விசாரணையில் அவரது பெயர் நான்சி (வயது 28) என்பதும், சென்னை பாலவாக்கம் யுனிவர்சிட்டி அவென்ï முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் என்பதும், இவர் குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யும் திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
மேலும், நான்சியின் கையில் இருந்த 8 மாத குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்க எடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்சி கைது செய்யப்பட்டார்.
மேலும் 3 பெண்கள் கைது
நான்சிக்கு உடந்தையாக இருந்ததாக ஜெயபிரசாத் என்பவரின் மனைவி ஆஷா (வயது30), ஆஷாவின் அக்கா கவிதா (35), உறவினர் ஆண்டாள் (45) ஆகிய மேலும் 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டது எப்படி என்று நான்சி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு:-
கடத்தல் கும்பலுடன் தொடர்பு
எனக்கு திருமணம் நடந்த ஒரு மாதத்தில் எனது கணவர் கிறிஸ்டோபர் மாரடைப்பில் இறந்துவிட்டார். அதன்பிறகு தனிமையில் வாடிய எனக்கு அயனாவரத்தை சேர்ந்த ஜெயபிரசாத் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவி பெயர் ஆஷா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் புதுவையில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை வாங்கிவந்தார். ஆனால் அந்த குழந்தையை வளர்க்க முடியவில்லை என்று ஆஷா கூறிவிட்டார். இதனால் அந்த குழந்தையை யாருக்காவது விற்று விடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக குழந்தையை கொண்டு வந்தபோதுதான் போலீசில் மாட்டிக் கொண்டேன்.
ஜெயபிரசாத் குழந்தைகள் கடத்தல் கும்பலோடு ஏற்கனவே தொடர்பு வைத்து இருந்தார்.
ரூ.1 லட்சத்திற்கு விற்பனை
ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தை ஒன்றை கடத்தி வந்து ஜெயபிரசாத் சென்னை அயனாவரத்தை சேர்ந்த கவிதா, ஓட்டேரியை சேர்ந்த ஆண்டாள் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அவர்கள் அந்த குழந்தையை காஞ்சீபுரத்தை சேர்ந்த அருள்மொழி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.
இவ்வாறு நான்சி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
குழந்தைகள் மீட்பு
நான்சி வைத்திருந்த ஜோஷ்மியா என்ற 8 மாத பெண் குழந்தையும், காஞ்சீபுரத்தில் அருள்மொழி என்ற பெண்ணிடம் விற்பனை செய்த கண்ணதாசன் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளும் சென்னை பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த இரண்டு குழந்தைகளும் யாருடைய குழந்தைகள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில், போலீசாரால் தேடப்பட்ட ஜெயபிரசாத்தை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துவிட்டனர். ஏற்கனவே மாதவரம் தனியார் ஆஸ்பத்திரியில் திருட்டு போன பெண் குழந்தையை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். கைதான 4 பெண்களையும் திருவொற்றிïர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்

ppp05Vivek Narayanan, TNN, Jun 21, 2010, 02.16am IST

CHENNAI: In a new twist to a child kidnapping racket busted recently, the Chennai suburban police on Saturday night arrested four women, who were part of the trafficking network and worked for a city-based fertility clinic, indicating the statewide ramifications of the case.

The women, including two ‘ayahs’ working in the hospital, are said to have identified buyers among patients who came to the clinic for treatment. While Nancy and Asha looked after the stolen babies, Kavitha, 33, and Andal, 47, identified a potential buyer for one of the babies.

The development adds another dimension to the child trafficking network, the second big one in recent times to be unearthed by the state police. In 2005, police had cracked an adoption racket involving an agency that sourced kidnapped babies and gave them away in adoption to couples abroad. CBI is still investigating the case. Police suspect that the latest case, involving a gang operating across TN, may have links to networks in other states as well.

Police confirmed that Saturday’s arrests were part of the child abduction racket that came to light when Krishnagiri police arrested seven members of a gang, most of them operating in Chennai and its suburbs. Deputy commissioner of police (Madhavaram), Annie Vijaya, told TOI, “The arrests are a continuation of the child trafficking racked busted in Krishnagiri (in May). We have been exchanging information with the Krishnagiri police and following up leads.”

It was in May that police first arrested several members of a gang and rescued nine babies from them. During interrogation of an accused, Dhanalakshmi, police found that several woman, posing as social workers, and a church priest, father Alphonse, believed to be the kingpin in the racket, were involved in an inter-state racket of stealing and selling babies to childless couples for price ranging from Rs 50,000 to a couple of lakhs of rupees. Those arrested included a woman, M Lalitha, a self-proclaimed social worker, running an orphanage in Puducherry. The woman used the unlicensed orphanage she ran to source babies and sell them to childless couples.
pd15
The alleged brain behind the four women arrested on Saturday, Jayaprasad, was picked up in Krishnagiri. Police also rescued two babies from the gang — an eight-month-old girl and a one-year-old baby boy. The children have been handed over to authorities of a government home.

Kodaikanal Head Master Molesting Children for 25 years caught

கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2010,01:34 IST

கொடைக்கானல்:மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் – கொடைக்கானல் பள்ளி தாளாளர்[1]! மதுரை: பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து விட்டு கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியின் தாளாளர் எம். எல். பிரைட் (76) தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சிறப்பு சலுகையின் கீழ் படித்து வரும் ஆதவற்ற மாணவிகளிடம், அப் பள்ளியின் தாளாளர் பிரைட் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது.

Young-girls-of-KPSYoung-girls-of-KPS

பெண் பிரின்ஸிபாலே உதவியாகச் செயல்படுவது: உதவியாக அந்த பள்ளியின் பிரின்ஸிபால், ஒரு பெண், செயல்படுவதும் வினோதமாகவே இருக்கிறது[2]. இது பி.ஏ.எம்.எஸ். டிரஸ்டின் கீழ் செயல்படும், ஒரு கிருத்துவ பள்ளியாகும்[3]. 1970ல் பிரைட் அஸாரியா மெமோரியல் ட்ரிரஸ்ட் – மறைந்த பிரைட் டேவிட் மற்றும் எட்வின் பால் அஸாரியா அவர்களின் நினைவாக எற்படுத்தப்பட்டதாகும். சகல வசதிகளைக் கொண்ட இது ஒரு ரிஸிடென்ஸியல் பள்ளியாகும். டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் கேட்டக்கேள்விகளுக்கு, இந்த பெண் நக்கலாகவே பதில் அளித்தார்.

chapel-inside-school-KPSchapel-inside-school-KPS

டிவி பார்த்துக் கொண்டே இளம்பெண்ணிடம் சில்மிஷம்: பூடான் நாட்டை சேர்ந்தவர் பானு (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஏற்காட்டில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இப்பள்ளியில் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவ, மாணவிகள் 17 பேர், தாளாளரின் பங்களாவில் தனி அறையில் தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தாளாளர் டிவி பார்ப்பது வழக்கம். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்[4].  கடந்த 3ம் தேதி பானு தங்கியிருந்த இடத்துக்கு வந்த தாளாளர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் பானுவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சார்லஸ் சாம்ராஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து, பானுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு குணமடைந்தவுடன், பள்ளிக்கு சென்று பானுவின் டி.சி.யை வாங்கினார். பின்னர், சில்மிஷம் குறித்து கொடைக்கானல் டிஎஸ்பி பாஸ்கரனிடம் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Swimming-pool-KPSSwimming-pool-KPS

இதையடுத்து, பிரைட் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடை பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது நில மோசடி புகாரும் பதிவாகி உள்ளது. காமுத்தாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான நிலத்தை, தனக்கு 99 வருட குத்தகைக்கு அவர் விட்டுள்ளதாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து பெரும் மோசடி செய்துள்ளார் பிரைட் என்பது அந்தக் குற்றச்சாட்டு.

NE-music-KPSNE-music-KPS

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்: இந்தப் புகார் குறித்தும் கொடைக்கானல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரைட் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு மனு இதுவரை தாக்கலாகவில்லை என்று மதுரை கிளை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எம். எல். பிரைட் என்பவன் ஒரு பெண்கள் பைத்தியம். அவன் பல பெண்களிடம் ஜாலியாக இருக்கும் மனப்பாங்கைக் கொண்டவன். உள்ளூர் போலீஸாரின் கூற்றுப்படி, பல பெண்களை, குறிப்பாக ஆசிரியைகளை, அவன் அவ்வாறு பலவந்தப்படுத்தியுள்ளான்[5]. மதர் தெரஸா பல்கலைக்கழகத்தில் “விசிட்டிங் லெக்சுரர்” என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டு, அங்கு “கெஸ்ட் ஹவுஸில்” தங்கும் வழக்கமும், ஒத்துப்போகும் பெண்களுடன் உல்லாசமாக காலம் கழிப்பதும் சகஜம்மாக இருந்தது. முதன் முதலாக, இப்பொழுதுதான் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

NE-girls-at-KPSNE-girls-at-KPS

பூடானிலிருந்து எந்த பெண்ணும் அந்த பள்ளியில் படீக்கச் சென்றதில்லை என்று பூடான் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடகிழக்குப் பகுதிகளிலிருந்து வந்துள்ள பெண்கள் நிறையவே காணப்படுகின்றனர்.

Dancing-girls-at-KPSDancing-girls-at-KPS

இவர்களை மாநிலம் வாரியாக அடையாளங்காணும் திறமை அந்த பிரைட்டிற்குத்தன் இருந்தது என்பது தெரிகின்றது.


[1] மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்-கொடைக்கானல் பள்ளி தாளாளர் தலைமறைவு[1]! புதன்கிழமை, ஜூன் 23, 2010, 12:39[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/06/23/kodaikanal-school-official-facing-sexual.html

[2] http://www.timesnow.tv/articleshow/4348014.cms

[3]http://www.kodaikanalpublicschool.org/Kodaikanal%20Public%20School-%20Introduction.htm

[4] http://www.newindianews.com/view.php?2bdmmAQ00ae0dcXXlm44e0ec4rNDYAA04b43oo46ee2cd33Ae0AK44dc23cAmfRcca400A4OXvdde2ee60MmYbb0

[5] http://www.kuenselonline.com/modules.php?name=News&file=article&sid=15845

முதியவனுக்கு வந்த சபலம்!

Reporter shockan.blogspot.com

முதியவர்கள், எல்லா வகையிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நாசம் செய்திருக்கிறார் இந்த 70 வயது தாளாளர்.

மலைகளின் இளவரசியான கொடைக் கானலில், 300-க்கும் அதிகமான மாணவ- மாணவிகள் பயிலும் கே.பி.எஸ். (கொடைக் கானல் பப்ளிக் ஸ்கூல்) பள்ளியின் தாளாளர் 70 வயதைத் தாண்டிய பிரைட்.

பிரைட்டின் கெஸ்ட் ஹவுஸில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு ஏழை மாணவி கர்த்தவ்யா, தனது உறவினரான ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச் பாதிரியார் சார்லஸ் சாமுராஜுக்கு போன் செய்தாள்.

“”அங்கிள்… வார்டன் ரத்தினம் செல் ஃபோன்ல பேசுறேன்… கரஸ்பாண்டண்ட் பிரைட் சார்… ரொம்ப அசிங்கமா… ஆபாசமா நடத்து கிறார். செக்ஸ் டார்ச்சர் பண்றார்… ப்ளீஸ் அங்கிள் உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போயிடுங்க. இல்லைனா… செத்துப் போயிடுவேன் அங்கிள்!” கதறினாள் கர்த்தவ்யா.

கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலுக்கு காரமடை, கன்னிவாடி, கோத்தகிரியிலும் பள்ளிக்கூட கிளைகள் உள்ளன. காரமடைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்த கர்த் தவ்யாவை, கூட்டி வந்து இந்த கே.பி.எஸ்.சில் சேர்த்திருந்தார் சார்லஸ் சாமுராஜ்.

“”என் மனைவியின் சொந்தக்கார மாணவி இந்த கர்த்தவ்யா. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஏழை மாணவிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் கே.பி.எஸ். பள்ளியில் பிரைட் சேர்த்துக் கொள்கிறார் என்று ஃபாதர் கிறிஸ் டோபர் சொன்னார். அதனால்… அங்கு 9-ஆம் வகுப்பில் சேர்த்தேன். ஹாஸ்டலில் தங்க வைத்தார். மாதா மாதம் 500 ரூபாயை தவறாமல் செலுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கர்த்தவ்யா எனக்குப் போன் செய்து பதட்டத்தோடு சொன்னதும் உடனே கொடைக்கானல் போனேன்…. அந்த 70 வயதுப் பெரியவர் நடந்து கொண்ட விதத்தை நீங்களே கர்த்தவ்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!” கர்த்தவ்யாவை நம்முன் நிறுத்தினார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

“”நான் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்குப் போகும் போது வழிமறிச்ச பிரைட் சார் “இனிமே நீ ஹாஸ்டல்ல தங்கக் கூடாது. உன்னை மாதிரி ஏழைப்பசங்க 16 பேர் என் கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கிப் படிக்கிறாங்க. நீயும் தங்கிக் கொள்’னு கூட்டிப்போனார். அன்னைக்கி நைட்… நைட்டியை போட்டுக்கிட்டு படம் பார்க்க மாடிக்கு வாங்கனு கூப்பிட்டார்.

எல்லாரும் மாடிக்குப் போனோம். அசிங்கமான இங்கிலீஷ் படத்தை டி.வி.யில போட்டுக் காட்டி… “இந்த மாதிரி படங்களைப் பாருங்க அப்பத்தான் இங்கிலீஷ் சரம் சரமா பேச வரும்’ என்றார் பிரைட்.
மறுநாளும் அதே மாதிரி படம்… 4-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு மாணவிகள் எல்லாரும் படம் பார்த்தபடியே தூங்கிட்டாங்க. அப்ப எங்க நடுவில வந்து உட்கார்ந்த பிரைட் சார்… முதல்ல தோள்ல கையைப் போட்டார். பிறகு, கண்ட கண்ட இடத்தில எல்லாம் தொட்டாரு… நான் அழுதுகிட்டே எழுந்து கீழே ஓடி வந்துட்டேன். காய்ச்சல் வந்துவிட்டது. மறுநாள் கிளாசுக்கு போக முடியலை. படுத்துக்கிடந்தேன். கெஸ்ட் ஹவுஸ்ல நான் மட்டும் இருந்ததை தெரிஞ்சுக்கிட்டு பிரைட் சார் வந்தார்… கட்டிப் புடிச்சு டார்ச்சர் செஞ்சாரு… எழுந்து சுவரோரமாப் போய் நின்னேன்…

“உன் மாமன் மாதம் 500 தான் கொடுக்கிறான்… மீதியை நான்தான் போடுறேன்… என் இஷ்டப்படி நடக்கலைனா வெளியே போடி’னு மிரட்டினாரு… அதுக்குப் பிறகு தான் வெளிய ஓடினேன். ஹாஸ்டலுக்கு போய் வார்டன்ட்ட செல்ஃபோனை வாங்கி அங்கிள்ட்ட சொன்னேன்!” திக்கித் திணறி கண் கலங்கியபடி சொன்னார் மாணவி.

இனிமேல் “பிரைட்’ டின் கட்டுப்பாட்டில் கர்த்தவ்யாவை படிக்க வைக்க விரும்பாத பாதிரியார் சார்லஸ் சாமுராஜ் மாணவியின் டி.சி.யை வாங்குவதற்காக தலைமையாசிரியர் சீபாபால் அறைக்குச் சென்றிருக்கிறார்.

“”ஹெச்.எம்.மிடம் பேசிக் கொண்டிருக் கும் போது ரொம்ப கோபமா அங்கே வந்த பிரைட் “டேய்… இந்த புள்ளை உடம்பில எங்கெங்கே நான் தொட்டம்னு சொல்லச் சொல்லுடா’னு என்னை அடிக்க வந்தார்… நான் சத்தமா பேச ஆரம்பிச்சதும் உடனே டி.சி.யை கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறுமிகளை பாழ்படுத்தும் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட முதியவரை சும்மாவிடக் கூடாது. காவல் துறையில் புகார் கொடுக்க விரும்புகிறேன். நக்கீரன் எனக்கு உதவி செய்யணும்!” -நடந்ததை விளக்கி, நமது உதவியைக் கேட்டார் பாதிரியார் சார்லஸ் சாமுராஜ்.

பாதிரியாரை, டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் அழைத்துச் சென்றோம். நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், எஸ்.ஐ. ராஜபுஷ்பம் தலைமையில் ஒரு டீமை அந்த ஸ்கூலுக்கு அனுப்பினார்.

தாளாளர் பிரைட் டின் கெஸ்ட் ஹவு ஸில் தங்கியிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்திய ஸ்பெஷல் டீம் பிரைட் மீது எஃப். ஐ.ஆர். போட்ட தும் தலைமறை வாகி விட்டார் பிரைட்.
பள்ளியின் முதல்வர் சீபா பாலோ “”அந்த மாணவி வேண்டுமென்றே பொய் சொல்கிறார்!” என்கிறார்.

“”பிரைட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய பாஸ்போர்ட்டையும் முடக்கப் போகிறோம்!” என்கின்றது போலீஸ். யாரைத் தான் நம்புவதோ?

CHENNAI: The 73-year-old correspondent of the reputed Kodaikanal Public School, M L Brite, is on the run, charged with the molestation of a Class IX student, who joined the residential school just over a month ago.

The 14-year-old, a citizen of Bhutan, was sexually molested by the 73-year-old correspondent, says the complaint filed with the Kodaikanal police by the student’s guardian.

Brite asked the girl to visit his room in her nightgown late in the night along with another girl on June 1. The other girl ignored the call but the new girl went ahead.

She was asked to serve coffee to Brite, who then allegedly misbehaved with her. When the girl refused to give in to his demands, Brite threatened her, using abusive language.

The frightened girl fell ill and she was admitted to hospital. The correspondent went to the hospital and when no one was around allegedly molested her. The girl called her guardian, who came and filed a police complaint on June 18.

The officer in charge of Kodaikanal Police Station told Express that preliminary investigations said that the educationist, running the school in the hill station for 27 years, had a history of harassing women, particularly teachers, for several decades, and at the Mother Teresa University, where he was a visiting lecturer. This was the first time a formal complaint had being lodged against him, the officer said.

Statewide child trafficking ring busted, 4 held

Statewide child trafficking ring busted, 4 held

ppp05Vivek Narayanan, TNN, Jun 21, 2010, 02.16am IST
CHENNAI: In a new twist to a child kidnapping racket busted recently, the Chennai suburban police on Saturday night arrested four women, who were part of the trafficking network and worked for a city-based fertility clinic, indicating the statewide ramifications of the case.

The women, including two ‘ayahs’ working in the hospital, are said to have identified buyers among patients who came to the clinic for treatment. While Nancy and Asha looked after the stolen babies, Kavitha, 33, and Andal, 47, identified a potential buyer for one of the babies.

The development adds another dimension to the child trafficking network, the second big one in recent times to be unearthed by the state police. In 2005, police had cracked an adoption racket involving an agency that sourced kidnapped babies and gave them away in adoption to couples abroad. CBI is still investigating the case. Police suspect that the latest case, involving a gang operating across TN, may have links to networks in other states as well.

Police confirmed that Saturday’s arrests were part of the child abduction racket that came to light when Krishnagiri police arrested seven members of a gang, most of them operating in Chennai and its suburbs. Deputy commissioner of police (Madhavaram), Annie Vijaya, told TOI, “The arrests are a continuation of the child trafficking racked busted in Krishnagiri (in May). We have been exchanging information with the Krishnagiri police and following up leads.”

It was in May that police first arrested several members of a gang and rescued nine babies from them. During interrogation of an accused, Dhanalakshmi, police found that several woman, posing as social workers, and a church priest, father Alphonse, believed to be the kingpin in the racket, were involved in an inter-state racket of stealing and selling babies to childless couples for price ranging from Rs 50,000 to a couple of lakhs of rupees. Those arrested included a woman, M Lalitha, a self-proclaimed social worker, running an orphanage in Puducherry. The woman used the unlicensed orphanage she ran to source babies and sell them to childless couples.
pd15
The alleged brain behind the four women arrested on Saturday, Jayaprasad, was picked up in Krishnagiri. Police also rescued two babies from the gang — an eight-month-old girl and a one-year-old baby boy. The children have been handed over to authorities of a government home.

அமெரிக்காவில் கற்பழித்த பாதிரி ஊட்டியில் ஜாலியாக இருக்கிறாரானாம்: எங்கே லெனின்?

http://christianityindia.wordpress.com/2010/04/07/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/

மைனர் குஞ்சு மாதிரி தண்டனைப் பெற்றப் பலான பாதிரி: 2001ல் ஜெயபால் என்ற பாதிரி ஒரு 14 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மின்னெசோடா, அமெரிக்காவில் மாட்டிக்கொண்டான். வாடிகனே – அந்த பாதிரியால் சிறுவர்-சிறுமிகளுக்கு ஆபத்து ஏற்படும் –  என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த பாதிரி ஜாலியாக ஊட்டியில் வேலை செய்து கொண்டு இருக்கிரானாம். ஆனால் இங்கு தமிழ் பத்திரிக்கைகள் கூறுவது வேடிக்கையானது, “இதுபற்றிய தகவல் வாட்டிகனை எட்டியதும், பாதிரியார் ஜோசப் பழனிவேலுக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுக்கப்பட்டது“. அதாவது மைனர் குஞ்சு மாதிரி!

20 வயதான அந்த பெண், இப்பொழுதும் வழக்கை விடாமல் தொடர்ந்து வருகிறாள். ஆனால், இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் அவனை பாதுகாத்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இப்பொழுது கத்தோலிக் பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் (CBCI) இந்தியா என்ற அந்த அமைப்பே அதனை விசாரிக்கும் என்று அறிவித்துள்ளனர்.

பலான பாதிரியின் விரியும் செக்ஸ் விஷமங்கள்!

சர்ச் எதற்காக இத்தகைய காமுகர்களை மறைத்துக் காக்கிறது? ஜோஸப் பழனிவேல் ஜெயபால் மின்னிசோட்டா பணிக் காலத்தில் 2005ல் ஒரு சிறுமியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் அவர் இந்தியா வந்த பிறகு அவர் மீது புகார்கள் எழுந்தன

Blessed_Sacrament_Levada_Balke_Jeyapaul_Amalraj

Blessed_Sacrament_Levada_Balke_Jeyapaul_Amalraj

சர்ச்சின் பணத்தையும் கையாடியக் குற்றம்: ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் புகாஅர்கல் உள்ளன. ஒரு பாதிரி எப்படி சர்ச்சின் பணத்தைக் கையாடல் செய்வான் என்று அந்த பாதிரியிடம் தான் கேட்டுத் தெர்ந்து கொள்ள வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், மைலாப்பூர் பிஷப்பிற்கு பல கடிதங்கள் எழுதியிருப்பினும், கண்டு கொள்ளாமல், அந்த காமுகனை மறைத்த விதம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது

Arulappa-Amalraj-says-NO

Bishop Arulappan Amalraj said he did not know of charges against a priest in his diocese in India until reporters contacted him

பிஷப் அருளப்பன் அமல்ராஜிடம் கேட்டபோது, நிருபர்கள் தன்னை வந்து சந்தித்த வரை, இவ்விவகாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னாறே பார்க்கலாம், சரியான தமாஷ் தான். ஆஹா, கிருத்துவர்களுக்கு இந்த அளவிற்கு பொய் சொல்ல “கர்த்தர்” மனசாட்சி கொடுத்துள்ளார் என்று நன்றாகவே தெரிந்தது

Jeypaul-sex-scandal.accused.priest

Jeypaul-sex-scandal.accused.priest

அவ்வளவுதான், கேட்க வேண்டுமா, இந்த ஆளே, “எல்லாமே பொய்” என்று ச்ஒல்ல ஆரம்பித்துவிட்டானாம்!

அப்பொழுது அந்த பெண்கள் என்ன பைத்தியக் காரர்களா?

இத்தனை கடிதங்களை பக்கம்-பக்கமாக இந்திய சர்ச் அதிகாரிகள், பிஷப்புகள்……………முதலியோர்க்கு அந்த அமெரிக்க கிருத்துவ அதிகாரிகள் எழுதியதெல்லாம் பொய்யா?

“நான் அறியேன்” என்று சொன்னால், பைபிளின் வசனங்கள் படி ஆபத்தாகி விடும் என்பதனை அறியானா அந்த குற்றஞ்சாட்டப் பட்டுள்ள காமுகன்?

உண்மையில் நடந்தது என்ன? ஜோஸப் பழனிவேல் ஜெயபால், இளம்பெண்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு அவர்களை “கன்னியாஸ்திரீக்களாஆக்குவேன்” என்று சொல்லி செக்ஸ் வேலையை செய்து வந்ததாக அமெரிக்க சர்ச் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். இவ்விவகாரத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக “வாய் மூலம் செக்ஸ்” (oral sex, American style) செய்யச் சொல்லி வற்புறுத்தினானாம். அந்த பெண் ஜெயபால் தன்னை படுக்கையில் தள்ளி, தனது மார்பகங்களை பிடுத்துக் கொண்டு, உடைகளையும் (pants) உருவினான். தன்னுடைய ஆண்குறியை (penis) தொடுமாறு வற்புறுத்திய போது அவள் மறுத்தாள். அப்பொழுதுதான், அவன் அவள் பாவத்தைச் செய்கிறாள், இதனால் அவள் வாழ்க்கை மிகவும் துக்கமாகும் என்றேல்லாம் மிரட்டினான், என்று அந்த பாதிக்கப் பட்ட பெண் கூறியுள்ளாள்.. விவரம் தெரிந்தபோது அவளையும் அவளது குடும்பத்தினையும் மிரட்டி இருக்கிறான். இப்புகார் வாடிகனுக்குச் சென்றபோது, அந்த பிஷப் உடனடியாக “அங்கி விலக்கப் படவேண்டும்” (defrock) என்று பரிந்துரைத்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அந்த உள்ளூர் சர்ச் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டதாகக் குறிப்புக் கூறுகிறது.

இதனால், இந்த பிரச்சினை ஊட்டி பிஷப்பிடம் வந்துள்ளது. அவரோ சாமர்த்தியமாக அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து முழு விஷயத்தையும் மறைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஒருவருடம் மடாலயத்தில் தொழுது கொண்டிருக்க வேண்டும் என்ற தண்டனை கொடுத்ததாக பூசி மொழுகப்பட்டது.

2005லேயே பிஷப் பாகே என்பவர் வாடிகனுக்கு எழுதிய கடிதத்தில், “…………இந்த ஆள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால்…….பெண்களுக்கு ஒரு பெரிய அபயாரமானவான இருப்பான்………..”, என்று எச்சரித்து எழுதியுள்ளார்.

மே மாதம் 2006ல் வாடிகணிலிருந்து வந்த பதில் கடிதத்தில், “………..அந்த ஆளுடைய நடவடிக்கை கண்காணிக்கப் படவேண்டும். இதற்கு மேலும் அவன் சிறுமியர்களுக்கு எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாதவாறும், நம்பிக்கையுள்ளவர்களிடையே அவதூறு ஏற்படும் வகையில் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என்றும் பரிந்துரைத்தது. ஆனால் அதற்குள் அவன் மேல் மேலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பொழுது அவன் எங்கே என்று தேடியபோதுதான், ஊட்டியில் ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இணைதளத்தில் எல்லா கடிதங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அவை எல்லாமே பிஷப் / பாதிரி ஏ. மலையப்பன் சின்னப்பா, ஏ. அந்தோனிசாமி, அருளப்பன் அமல்ராஜ்…………………………என்ற எல்லொருக்க்ம் 2005லிருந்தே நன்றாகத் தெரியும். இருப்பினும்., அந்த காமுகனின் செயலை மறைத்த் விதம் ஆச்சரியமாகவே உள்ளது.

இரண்டாவது இளம் பெண்ணைக் கற்பழித்த பாதிரி: வேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினாள்.

பலான பாதிரியை அமெரிக்க மற்றும் இந்திய பாதிரிகள் காக்கும் ரகசியன் என்ன? கிரீன்புஸ் என்ற சர்ச்சின் (Greenbush, Minnesota) பிஷப் விக்டர் பாகே (Victor Balke) என்பவருக்கும் தெரிந்திருந்தும் அமுக்கி வைத்து விட்டாராம். புகார் கொடுத்ததும் தண்டனை கொடுக்காமல் அல்லது போலீச் நடவடிக்கை எடுக்காமல், வாடிகனுக்கு சொல்லி, ஊட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டானாம், அந்த காமுகன். ஊட்டியில் ஏ. அல்மிராஜ் (A. Almiraj of Ootacamund) அடைக்கலம் கொடுத்ததுடன், ஆசிரியர்களை நியமிக்கும் நல்ல அதிகாரமான வேலையிலும் அமர்த்தப் பட்டானாம்!

http://blogs.telegraph.co.uk/news/deannelson/100032887/another-paedophile-priest-is-protected-by-the-catholic-church-this-time-in-india

ஜெயபால்-காமுகன்-கற்பழிப்பாளி

Jeypaul-the sex-priest

Jeypaul-the sex-priest

வில் ஹியூம் – சின்ன வீடு புகழ்: இன்டர் போல் உதவியால் பிடிக்கப் பட்டான்: வில் ஹியூமும் அவ்வாறே பிடிக்கப் பட்டான். அந்நிலையில், இவன் மட்டும் எப்படி, ரகசியமாக வந்து, தங்கியிருக்க முடியும்? ஏன் இந்திய போலிஸார் எந்த நடவடிக்கயையும் எடுக்கவில்லை. சட்டப் படி இந்த எல்லொருமே குற்றாவாளிகள் தாமே? இவன் பாதிரி என்ற ஒரே காரணத்தால் விஷயம் அமுக்கப் படுவதானால், கிருத்துவர்களின் சதி திட்டம் தான் என்ன?

சானியா பிரச்சினைப் போன்று, இப்பிரச்சினையையும் இந்தியர்கள் ஒதுக்கிவிட முடியாது. இங்கு பாதிக்கப் படுவதும் இந்தியர்கள்தாம்.

இந்த ஆள் வேண்டுமானால், வசதியாக அமெரிக்காவிற்குச் சென்று அத்தகைய வேலையை செய்திருக்கலாம், ஆனால், மற்ற பிஷப்புகள், பாதிரிகள், கிருத்துவ குருக்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இங்கேயே அத்தகைய பலான செக்ஸ் வேலைகளில் ஈடு பட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

ஆகவே, இதை ஒரு சமூகப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவர்கள் “மடாலயங்களினின்று” விலக்கப் பட்டு, கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்

Thanks-http://christianityindia.wordpress.com/2010/04/07/பலான-பாதிரியின்-விரியும்/

போப்புக்கு நடக்கும் செக்ஸ் விவகாரங்கள் சரியாகச் சொல்லப்படவில்லையாம்!

http://christianityindia.wordpress.com/2010/04/11/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%af%8d/

குறிப்பு: இப்புகைப் படங்கள் குருமார்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்துப் போடவில்லை.

ஆனால், வழி நடத்தும் குருமார்கள், பெண்களிடமிருந்து விலகி இருந்தால் பிரச்சினைகள் வராது, ஒழுக்கம் இருக்கும்….என்பதனை உணர்த்தப் போடப் படுகிறது.

அனைத்தும் இணைத் தளங்களில் உள்ளவைதாம்!

வாடிகன் அதிகாரிகள் போப்புடன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் செக்ஸ் விவகாரங்களை வழக்கமாக பேசுவதில்லை என்பதனால், பல விஷயங்கள் தெரியாமல் போகின்றன. அதாவது முறையான பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள் முதலியவை இல்லாமல் போகின்றன. அதனால்தான் இந்த செக்ஸ் அவதூறை தடுக்க முடியாமல், அமெரிக்க ஆதரவாளர்களே  நொந்து போய் விட்டனராம் (இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஒரு செய்தி).

ஆனால் கத்தோலிக்க சரித்திரம் அவ்வாறு இல்லை. போபுகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. அப்படி சில கார்டினல்கள் தமதிச்சைக்குச் செயல் பட்டால், மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முக்கியமாக செக்ஸ் விவகாரம் எனும் போது, அதில் எல்லொருமே பலவீனமானவர்கள் தாம். ஆகையால் தான் கிருத்துவ மேலிடம் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது. ஏனெனில் நடவடிக்கை எடுத்தால், மற்ற விஷயங்கள் வெளிவந்து விடுமே என்ற பயம் தான்.

sexy-pope-john-paul-2sexy-pope-john-paul-2

Note: A nightclub flyer showing Pope John Paul II clutching a bottle of beer and dancing with a blonde in a mini-skirt had been banned by watchdogs for causing ‘serious offence’. The ad, for Ipswich nightclub Club Fire, showed an image of the former Pontiff beneath a logo reading ‘Beserk’, and was aimed at those after an ‘alternative rock night – such as metallers, punks, goths and other similar subcultures’.

Sexy-pope-posingSexy-pope-posing

காற்றடித்து விலகியதா – தெரியவில்லை!

Kissing PopeKissing Pope

The Kissing Pope: One of the novelties in morality of Pope Wojtyla was to frequently kiss young women. In the picture above he seems quite involved with his action.  Never before had any Pope acted publicly in this way.

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

Watching a dancer during Mass at World Youth Day – 2000

பெண்கள்.போப்பை.வரவேற்பதுபெண்கள்.போப்பை.வரவேற்பது

அரை நிர்வாணப் பெண்களை வைத்து போப்பை வரவேற்பு செய்வது!

12-04-1984.பெண்கள்.ஆடுவதை.ரசிக்கும்,போப்12-04-1984.பெண்கள்.ஆடுவதை.ரசிக்கும்,போப்

இதை மேனாட்டு நாகரிகம் என்று சப்பைக் கட்ட முடியாது. அளவுகோல் என்று வரும்போது, அதே ம்ஆதிரிதான் அளந்து பார்க்க வேண்டியுள்ளது.

On April 12, 1984, Catholic high schools of Rome brought together 1,200 young women in skintight apparel to perform for John Paul II, above left, wearing a red cape, at the olympic stadium.

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவைதிறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை

Papua New Guinea, May 8, 1984: The bare-breasted native woman leaves the Pope’s presence after presenting the Offertory gifts.

போப்புக்கு.பரிசளிக்கும்.அறை.நிர்வாண.பெண்போப்புக்கு.பரிசளிக்கும்.அரை.நிர்வாண.பெண்

Papua New Guinea, May 8, 1984 –  A hefty nude native woman brings the Offertory gifts for the Supreme Pontiff’s Mass.
A new concept of Morals is being applied.

பயபக்தியுடன்.திரும்பி.போகும்.பெண்பயபக்தியுடன்.திரும்பி.போகும்.பெண்

Papua New Guinea, May 8, 1984 – The nude native woman returns to her place after presenting the Offertory gifts to John Paul

கன்னியாஸ்திரீயின்.ஆட்டம்கன்னியாஸ்திரீயின்.ஆட்டம்

இப்படி மார்பகங்கள் பட்டால், கிலுகிலுப்பு வராதா? மறுபடியும் தனியாக சந்திக்க ஆசைவராதா?

Cologne 2005, August 16 – 21 – Belgian Sr. Johanne Vertommen dances with missionary priest Fr. John
in two close-ups of World Youth Day 2005. These pictures were published by the Flemish daily Het Laatste Nieuws.

ஆட்டம்.போடும்.கன்னியாஸ்திரீஆட்டம்.போடும்.கன்னியாஸ்திரீ

இந்த அளவிற்கு, பாதிரிகளையும், கன்னியாஸ்திரீகளையும் நெருக்கமாக இருக்க அனுமதிப்பது சரியா?

செக்ஸ் பிரச்சினைகள் வரும் எனும்போது, ஆண்-பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடைவிதிப்பது, அது செக்ஸ் உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கும்.

எல்லோரும் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி ரிஷி, முனி, யோகி…போல இருக்க முடியாது.

அவ்வாறு முடிந்தவர்கள் இருக்கலாம்.

முடியாதவர்கள், திருமணம் செய்து கொண்டு இருப்பதுதான் எல்லா பக்தர்களுக்கும் நல்லது.

பாதிரியார்கள் மாநாட்டில் சலசலப்பு: செக்ஸின் எதிரொலி!

கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆண்டு நிறைவு விழா மற்றும் கருத்தாய்வரங்கம் சென்னை சாந்தோம் சர்ச்சில் நடந்தது (08-04-2010 & 09-04-2010). பலமுறை இவ்வாறு பிஷப்புகள் கூடி கிருத்துவர்களின் பிரச்சினை, நாட்டு-நடப்பு முதலியவற்றைப் பற்றி விவாதம் நடத்துவர். ஆனால், இப்பொழுது, உலகமுழுவதும் மற்றூம் இந்தியாவிலும், பிஷப்புகள் தொடர்ந்து பல குற்றங்கள், மோசடிகள், கொலைகள், கொல்லைகள்……முக்கியமான செக்ஸ், கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் முதலியவற்றில் ஈடுபடுவது அதிகமாவது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு 1980களில், தேவையில்லாமல், லிபரேஷன் தியாலஜி (Liberation Theology) என்ற சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தி பல பாதிரியார்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடு பட்டு சீரழிந்தனர். கூட போதை மருந்து, பெண்கள் என சேர்ந்து கேவலமாகி விட்டது. மீன்சுருட்டி வங்கிக் கொள்ளையில் பாதிரியார்கள் கையும்-களவுமாக மாட்டிக் கொண்டனர். இருப்பினும் அவர்கள் கதைகள் எல்லாம் மறைக்கப் பட்டன. இப்பொழுது, கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் விவகாரங்கள் எல்லை மீறி போய்விட்டதால், பெண்கள் முன்பு நிற்கவே, பேசவே நேர்மையான பாதிரி, பாஸ்டர் களுக்கு அவமானமாக இருக்கிறது. எனவே குற்றங்களில் ஈடுபடும் பாதிரிகள், பிஷப்புகள் அவர்களது பதவிகள் பறிக்கப் படவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், மொத்த பிஷப் கூட்டமோ மூடி மறைக்க வேண்டும் என்று எண்ணுவது ஆச்சரியமாக உள்ளது.

மயிலை மறை மாவட்ட துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் வரவேற்றார். ‘இந்தியாவில் இன்றைய பாதிரியார்களின் நிலை மற்றும் கிருத்துவத்தின் மேன்மை‘ என்ற தலைப்பில் பாதிரியார் டொமினிக் வெலியத் பேசினார். இறையியல் ரீதியாக வேத வசனங்களைச் சொல்லி பேசினாலும், அவர்களது மனசாட்சி உருத்துவது அவர்களது கண்களில் நன்றாகவேத் தெரிந்தது. அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டதும், கைக் குலுக்கியதும் செயற்கையாகவே பட்டது. சர்ர்சைக்குட்பட்ட பிஷப்புகள் வரவில்லை. வேலூர் மறை மாவட்ட சமூக நலச்சங்க இயக்குனர் லூர்துசாமி தலைமையில் குருக்கள் பன்முகபணி குறித்த கலந்தாய்வரங்கம் நடந்தது. சமுதாய, கல்வி, பொருளாதார முன்னேற் றம் குறித்த செயல்பாடு திட்டங்கள் குறித்து கருத்தாய்வரங்கத்தில் விவாதிக்கப்பட்டன.

பிஷப்புகளின் நடவடிக்கைகள் பற்றி விவாதம் வந்தபோது அமுக்கி வாசிக்கப் பட்டன. தனியாக மூடிய அறைக்குள் விவாதம் என்ற ரீதியில் விஷயங்கள் அலசப் பட்டன. அதில் பெண்-கிருத்துவ அதிகாரிகல் கலந்து கொள்ளாவில்லை. பலான பாதிரிகளின் அங்கிகள் நீகப் படவேண்டும் என்ற விவாதத்மும் கட்டுக்குள் அடக்கப் பட்டது. இதை அறிந்த விசுவாசக் கிருத்துவர்கள் மிகவும் வருந்தியதாகத் தெரிகிறது.

பிஷப் இல்லத்திலிருந்து பாதிரியார்களின் ஊர் வலம் நடந்தது. பிஷப் பேரவை தலைவர் சின்னப்பா தலைமையில் பாதிரியார்கள் ஆண்டு நிறைவு விழா மற்றும் கூட்டுத் திருப் பலி நடந்தது. கோவை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் மறையுரை நிகழ்த்தினார். பிஷப் சவுந்தரராஜு, தமிழக அரசின் சிறுபான் மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பாதிரியார் அந் தோணி அம்புரோஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு: புதிய வரையறைகள் பரிந்துரை
மே 01,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24627

சென்னை : பல்வேறு நாடுகளில், இந்திய கத் தோலிக்க பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த புதனன்று (28-04-2010) பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க பிஷப்களின் மாநாட் டில் (சி.பி.சி.ஐ.,), திருச்சபை குருமார்கள் குழுவிற்கு புதிய வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரையறைகள், வாட்டிகனில் உள்ள போப் பெனடிக்ட் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டு, வரும் ஜூன் 2010 இறுதியில் இறுதி வடிவம் பெற உள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.,யின் செய்தித் தொடர்பாளர் பாபு ஜோசப் கராகோம்பில் கூறியதாவது: “இந்த மாநாட்டில், கத்தோலிக்க பாதிரியார்களால், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. எங்களது நிறுவனங்களில் படிக்கும் குழந் தைகளின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டது. தற்போது, இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள வரையறைகள் இறுதி வடிவம் பெறும் வரை பொதுமக்களுக்கு தெரிவிக்கப் பட மாட்டாது. இந்த வரையறை, வாட்டிகனுக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து பிஷப்களுக்கும், அவர்களது கருத்துகளை அறிய அனுப்பப்படவுள்ளது. பாலியல் தொடர்பான குற்றம் சாட்டப்பட்டவர்களை திருச் சபை குருமார்கள் குழுவிலிருந்து நீக்கவோ, தண்டிக்கவோ, அவர் கள் மீதான குற்றம் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்“,  இவ்வாறு பாபு ஜோசப் கூறினார்.

தற்போது, இந்த மாநாட்டில் வகுக்கப்பட்டுள்ள வரையறைகள் இறுதி வடிவம் பெறும் வரை பொதுமக்களுக்கு தெரிவிக்கப் பட மாட்டாது. அதாவது, ரகசியமாகவே வைத்துக் கொண்டு சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருப்பார்கள் போலயிருக்கிறது.

ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், ‘மினஸ்சோட்டா’ என்ற இடத்தில், 14 வயது சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்ற நடவடிக்கையாக தற்போது தமிழகத்தில் ஊட்டியில் பணியாற்றி வருகிறார்.

பிரான்சிஸ் நெல்சன் என்ற பாதிரியார், ‘புரூக்கிலின்’ என்ற இடத்தில் ஒரு சிறுமியிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக, கடந்த 2003ம் ஆண்டு நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் தற்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் எனும் இடத்தில் உள்ள பிஷப் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இதுபோல பல பாதிரியார்கள் மீது, பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில், இந்திய கத்தோலிக்க பாதிரியார்கள் மீது பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விரிவாக ஆராய போப் பெனடிக்ட், மற்ற நாடுகளில் உள்ள திருச்சபை குருமார்கள் குழுவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மதுரை மோஹன மன்மத கத்தோலிக்க சாமி டேவிட் – கதை என்ன என்ற சொல்லப் படவில்லை.

யார் இந்த பிரான்சிஸ் நெல்சன் என்ற பாதிரி?: 14 வயது சிறுமியை 2003ல் கற்பழிக்க முயன்றபோது அகப்பட்டவன் தான் இந்த நெல்சன் பிரான்ஸிஸ். ஜெயிலில் நான்கு மாத தண்டனையும் பெற்றான். இப்பொழுது அமைதியாக இந்தியாவிற்கு வந்த இவன் 2007ல் பிஷப்பாகவும் ஆனான்!

The Rev. Francis X. Nelson was sentenced to four months in prison in 2003 in connection with his role as a visiting priest at a church in Brooklyn. His victim testified that Nelson showed up at her grandmother’s apartment uninvited and groped her.  Nelson however denied he was the same priest who had served in New York and hung up. However, his bishop, Rev. Peter Remigius, confirmed that Nelsonhad returned to India after serving his jail term and continued to work as a priest in the bishop’s office in his home diocese of Kottar in southern India.

“His conviction was finished, and he has finished his term,” Remigius said. “He is not in charge of any parish … he is helping people who are alcoholic.”  Remigius said Nelson had already returned to Kottar when he took over as bishop in 2007. He was not aware of any correspondence between the Vatican and his predecessor, the Most Rev. Leon A. Tharmaraj, regarding whether Nelson should be removed from the priesthood following his conviction. Tharmaraj died in 2007.

CBCI-sex-phedophileCBCI-sex-phedophile

செக்ஸ் என்பது கிருத்துவர்களுக்குத் தேவையானது என்றாகிவிட்டது. இனி கன்யாஸ்திரீகளின் கதி அதோகதிதான் போல! ஒருவேளை அவர்கள் உஷாராகி விட்டதால், இப்படி சின்னஞ்சிறுசுகளின் மீது பொம்மை கொடுத்து, சாக்கிலேட் கொடுத்து, கைபோட-கசக்க-கற்பழிக்கத் துடிக்கிறார்களோ இந்த காமுக பிஷப்புகள்-பாதிரிகள்-பாஸ்டர்கள்-போதகர்கள்…………………

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே