கோவை செயின்ட் செபாஸ்டின் சர்ச் ஜான் போஸ்கோ
May 22, 2010 1 Comment
கோவை: கோவையிலுள்ள செயின்ட் செபாஸ்டின் சர்ச் பாதிரியார் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க, கோவை போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை, பீளமேடு விமான நிலைம் அருகேசெயின்ட் செபாஸ்டின் சர்ச் உள்ளது. கோவை ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சர்ச்சின் பாதிரியாராக (பங்குத்தந்தை) ஜான் போஸ்கோ உள்ளார். சர்ச் உறுப்பினர்களில் ஜெரால்டு பூபாலன், சாலமன், ஜேசுராஜ், குணசேகரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர், பாதிரியார் ஜான்போஸ்கோ, சர்ச்சிற்கு வரவேண்டிய வருவாயில் மோசடி செய்து சொத்து சேர்த்ததாக, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி புகார் கொடுத்தனர். கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் புகாரை ஏற்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
புகாரில் கூறியிருப்பதாவது: பாதிரியார் ஜான்பாஸ்கோ, சர்ச் உறுப்பினர்களிடம் இருந்து பெறும் தொகை குறித்து வரவு -செலவு கணக்கு பார்க்கவில்லை. கோவை பிஷப் அலுவலகத்திற்கு வரவு -செலவு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை. பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். மறைமாவட்ட விதிமுறைகளை மீறி அவரது பெயரில் ஏராளமான சொத்துகளை வாங்கியுள்ளார். கோவைப்புதூரிலுள்ள ‘கிங்’ காம்ப்ளக்சில் மாணவர்கள் தங்கும் விடுதியை 1.5 கோடி ரூபாயில் கட்டி வருவாய் ஈட்டி வருகிறார். பாதிரியார் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கார்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார். பல வங்கிகளில் இவர் பெயரிலேயே கணக்கு வைத்துள்ளார். இது தவிர இவரது பெயரில் சென்னையிலுள்ள வி.ஜி.பி., நிறுவனத்தில் பல லட்சங்களை டிபாசிட் செய்துள்ளார்.
சர்ச்சிலுள்ள பாதிரியார் அறையில் இரவு நேரத்தில் மது அருந்துதல், பெண்களோடு உல்லாசமாக இருப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சர்ச்சின் புனிதத்தை கெடுத்து வருகிறார்.
அனாதையாக உள்ள குழந்தைகளுக்கு ஆசிரமம் கட்டுகிறேன் என்று கூறி பல கோடிகளை கொள்ளையடித்து சர்ச் உறுப்பினர்களை ஏமாற்றிய பாதிரியார் ஜான்போஸ்கோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட ஐகோர்ட், பாதிரியார் மீது விசாரணை மேற்கொள்ள கடந்த 7ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
செய்தி: தினமலர்
Why do you bring all these here. We know every Church handles huge cash.