சங்க இலக்கியத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்
July 11, 2011 Leave a comment
இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
http://ta.wikipedia.org/ பதிற்றுப்பத்து -(பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது. இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம்.
பதிற்றுப்பத்து- 4:1 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலைத் தெளிவாக உரைக்கின்றது.
பாடல் 31
நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) இந்த நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.
பாடல் 31 – கமழ் குரல் துழாஅய்
குன்றுதலை மணந்து குழூஉக்கடல் உடுத்த
மண்கெழு ஞாலத்து மாந்தர் ஓர்ஆங்குக்
கைசுமந்(து) அலறும் பூசல் மாதிரத்து
நால்வேறு நனம்தலை யொருங்கெழுந்(து) ஒலிப்பத்
5 தெள்உயர் வடிமணி எறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண்பொரு திகி¡¢க் *கமழ்குரல் துழாஅய்*
அலங்கற் செல்வன் சேவடி பரவி
10 நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர
இந்த செய்யுளில்- ஒரு கோயிலையும் அங்கு செய்யப்படும் விஷ்ணு வழிபாட்டையும் கூறுகின்றது. கோயில் கடற்கரையை அடுத்து இருந்தது. பல திசையிலுமிருந்து வந்த மக்கள் கையைத் தலைமேல் கூப்பித் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி வழிபடுவர். கோயில் மணி ஒலிக்கும் போது விரதமிருக்கும் உண்ணா நோன்பிகள் துறையில் நீராடிப் பின் கோவிலில் வழிபாடு செயவார். கண் பொரு திகிரியும் கமழ்குரல் துழாயும் உடைய திருமாலை இவ்வாறு வழிபடுவர்.நார்முடிச் சேரலும் வண்டன் போலப் பெருஞ்செல்வம் படைத்தவன். மண்ணுலகத்தில் மாபெருஞ் ஞெல்வம் படைத்தவன் வண்டன். (வானுலகத்துக் குபேரனைப் போல) நார்முடிச் சேரலின் மனைவி அரண்மனைச் செல்வி வானில் மின்னும் அருந்ததி நட்சத்திரம் போலெ கற்பில் சிறந்தவள்.
இவ்வாறு கூறப்படும் வழிபாடு நிகழ்ந்த்தாக உள்ள கோயில் பெயர் செய்யுளில் இல்லவிடிலும் இது திருவனந்தபுரம் பத்மநாபரையே குறிக்கும். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டது போலெ சயனக் கோலத்தில் அனந்தமாகக் காட்சி அளிப்பதினாலே தான் ஊர் திரு அனந்தபுரம் என்க் கோயிலின் பெயராலெ விளங்குகின்றது.
பயன் பட்ட நூல்கள் 1. பதிற்றுப்பத்து
2. குறள் கூறும் சமையம்- காமாட்சி சீனிவாசன் விளியீடு-மடுரைக் காமராசர் பல்கலைக் கழகம்