பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில்20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை

ஜூ வி கட்டுரை

டிரஸ்ஸைக் கழட்டு… மயக்கம் வந்தா ஒரு க்ளாஸ் குடி…”
—————————-
கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒருபாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக் கிறது போலீஸ்!

தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார்

Pc0071300.jpg

ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பாதிரியார்மீது ‘செக்ஸ் டார்ச்சர்’ புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். ‘பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, ‘நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா’ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே ‘இதை குடி சரியாயிடும்’னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும், என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி… (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து…) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. ‘யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!’னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. ‘இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்’னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!’ என்றான்.

மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, ‘பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்குபயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!’ என்றார்.

மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், ‘ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப… அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், ‘சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட் டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க… உள்ளே ‘டிரிப்பிள் எக்ஸ்’ ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர். காவல் துறையி னர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!’ என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, ‘பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே ‘பாலியல்’ தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் ‘பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது’ன்னு மூடி மறைச்சுட்டாங்க. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!” என்றார்.

திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும்சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!’ என்றார்.

http://www.google.com/url?sa=D&q=http://dondu.blogspot.com/2010/03/blog-post_04.html%3FshowComment%3D1267682865865%23c1735493435145880091&usg=AFQjCNGtxLQYo4BXvWQpNnYtcp62lEsAGw

One Response to பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில்20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை

  1. Pavitra says:

    திருச்சிதலைமையாசிரியர் மீது ஓரினச்சேர்க்கை புகார்

    First Published : 31 Jan 2010 05:28:28 AM IST

    அறந்தாங்கி,​​ ஜன.​ 30: ​ புதுக்கோட்டை மாவட்டம்,​​ அறந்தாங்கி அருகே சனிக்கிழமை பள்ளி மாணவர்களிடம் தலைமையாசிரியர் தகாத முறையில் ​ நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டி பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    ​ ​ தஞ்சாவூர்,​​ மகர்நோன்புசாவடியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா.​ இவர் அறந்தாங்கி,​​ திருப்புனவாசல் அருகேயுள்ள பாதிரகுடி ஆர்.சி.​ உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
    ​ இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை இரவில் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும்படி ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.​ இதன் அடிப்படையில் அங்கு தங்கிப் படித்த மாணவர்கள் சிலரிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
    ​ இதுகுறித்து அறிந்த அந்த மாணவர்களின் பெற்றோர் ஒருவருக்கொருவர் விசாரித்து,​​ இந்த விஷயத்தை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில்,சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.​ இதையறிந்த ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா தலைமறைவாகிவிட்டார்.​​ இந்நிலையில்,​​ தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அறந்தாங்கி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அ.​ சரவணன்,​​ மீமிசல் காவல் ஆய்வாளர் ​(பொ)​ சுப்பையன் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
    அப்போது தலைமையாசிரியர் அறையிலிருந்த விசிடிக்கள்,​​ ஆபாச புத்தகங்கள்,​​ மது போத்தல்கள் ஆகியவற்றை போலீஸôர் கைப்பற்றினர்.​ ​ ​ இதன் தொடர்ச்சியாக,​​ பள்ளி நிர்வாகத்துடன் தொடர்புடைய புனித சந்தியாகப்பர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தம்,​​ உதவிப் பங்குத்தந்தை ஜான் பீட்டர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.​
    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=189890&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=

Leave a comment

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே