Today’s CSI, Paul Dinakaran, Mohan Lazarus, Benny Hinn

http://www.jamakaran.com/tam/2010/april/kelvi_badhil.htmகேள்வி: பிஷப்மார்களைப்பற்றி உங்களுக்கு தகவல்கள் தருபவர் அல்லது CSI சபைக்காக அதிலிலுள்ள பண ஊழல்களுக்காக போராடுபவர்கள் எல்லாரும் உண்மையான நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இதில் சிலர் பிஷப்மார்களை பிளாக் மெயில் செய்து பணம் கறக்கும் நோக்கத்தோடு போராடுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்படி அவர்களின் விவரம், அவர்களின் உண்மையான முகம் அறிய வேண்டுமானால் எனக்கு எழுதுங்கள். அதற்கான ஆதாரங்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.

பதில்: எனக்கு CSI & லூத்தரன் சபை பிஷப்மார்களின் பணஊழல்களைப்பற்றி தகவல் தருபவர்களைப் பற்றியும் அல்லது அதற்காக போராடும் குழுக்களைப்பற்றியும் அதில் உள்ளவர்களைப்பற்றியும் ஓரளவு அறிவேன். CSIயின் எல்லா மாநில டையோசிஸ்ஸிலிருந்து யார் எனக்கு எந்த தகவல்களை அனுப்பினாலும் அனுப்பும் நபர்களைப்பற்றி எந்த விதத்திலாவது விசாரித்து விவரங்களை சேகரித்துக்கொள்வேன். நீங்கள் குறிப்பிட்டபடி CSI & லூத்தரன் சபைகளின் அல்லது ஊழல் செய்யும்பிஷப்மார்கள், மாடரேட்டர் ஆகியவர்களுக்கு எதிராக போராடுபவர்களில் அல்லது எனக்கு தகவல் அனுப்புபவர்களில் வெகு சிலர் மட்டும் பணம் அல்லது பதவி எதிர்பார்ப்போடு வேறு சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாக பிஷப்மார்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். பணத்துக்கு மயங்காமல் கொள்கையின் அடிப்படையில் சபையை குறித்த பாரம்கொண்டவர்கள் போராட்ட குழுக்களில் உள்ளவர் மிகமிக குறைவானவர்களே! ஆனாலும் ஊழலின் உண்மையை அறிய தருபவர்களின் தவறான நோக்கத்தை நான் ஆராயாமல் உண்மை வெளியேவர அவர்கள் அனுப்பும் தகவல்களை பயன்படுத்திக்கொள்கிறேன்.

சிலசமயம் கர்த்தர் தன் காரியத்துக்காக பிசாசையும் பயன்படுத்துவதைப்போல பழைய ஏற்பாட்டில் சவுல் ஒரு உதாரணம், 2 தெச 2:11,12 வசனம் மற்றொரு உதாரணம்.

ஆகவே தவறானவர்கள் என்றாலும் அவர்கள் அனுப்பும் தகவல்கள் உண்மையானதாகஇருந்தால் அந்த தகவலை வாசகர்களை எச்சரிக்கும அல்லது உணர்த்தும் நல்ல காரியத்துக்கு பயன்படுத்துகிறேன். சில டையோசிஸ்களில் புகார் அளித்தவர்களில் சிலர் சீக்கிரமே பிஷப்மார்கள்மேல் அளித்த கோர்ட் புகாரை திரும்ப பெற்றுக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன் அல்லது அந்த புகார்களினால் பிஷப்மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க தங்கள் வக்கீல்கள்மூலம் ஏற்பாடு செய்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கிறேன். காரணம் பெரிய தொகை – பதவி இவைகளை புகார் அளித்தவர்கள் பெறும்வகையில் பிஷப் அவர்கள் புகார் அளித்தவர்களோடு பேரம் பேசிக்கொண்டிருப்பதாக தகவல் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த தகவல் உண்மையானால் பல கோடிகள் ஊழல் செய்த பிஷப்மார்கள் நீதிமான்களாக CSI சபைக்குள் மறுபடியும் புதிய பெலத்துடன் உலாவருவதை நீங்கள் விரைவில் காண்பீர்கள். நீதிமன்ற புகார்களும் ஒன்றுமில்லாமல்போகும். பணம் பாதாளம்வரை பாயும்போது, பணத்தினால் ஒரு சில நீதிபதிகளை விலைக்கு வாங்கும்போதும் பிஷப்புக்கு எதிராக புகார் அளித்தவர்களை விலைக்கு வாங்குவது பிஷப்மார்களுக்கு சிரமமான காரியம் இல்லை. இதன்மூலம் நாம் அறியவேண்டியது ஊழல் செய்த பிஷப்மார்களுக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு அளித்த புகார்களை வாபஸ் வாங்கப்போகும் வீரர்களுக்கும் இதில் வெட்கம் ஏதும் இல்லை, தெய்வபயமும் இல்லை.

கேள்வி: Dr.பால்தினகரன் தன் பத்திரிக்கையான இயேசு அழைக்கிறாரில் தான் அந்நியபாஷை பேசும்போது கர்ஜித்தேன் என்கிறார், நடுக்கம் வந்ததாகவும் சரீரத்தை கட்டுப்படுத்தமுடியாமல் போனதாகவும், அக்கினி அவருக்குள் வந்ததாகவும் கூறுகிறாரே? நானும் பெந்தேகோஸ்தே சபை பரம்பரை குடும்பத்தில் பிறந்தவன்தான், நானும் அந்நியபாஷை பேசுகிறேன். ஆனால் கர்ஜனை என்று இவர் சொல்வது எனக்கு புதிதாக இருக்கிறது?

பதில்: தம்பி.பால்தினகரன் தன் தகப்பனாருக்கு கிடைக்காத அனுபவத்தை தனக்கு கிடைத்தாக எழுதுகிறார். சகோ.D.G.S.தினகரனுடன்கூட உபவாசித்து ஒரே அறையில் படுத்து உறங்கிய ஆரம்ப நாட்களில் பல வருடங்களில் ஒருநாளும் பரிசுத்தஆவியில் நிரப்பப்பட்டு கர்ஜித்ததை நான் காணவில்லை. இவருக்குமட்டும் கர்ஜனை எப்படி வந்தது என்று விளங்கவில்லை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அல்லது வடஇந்தியாவில் நிர்வாண சாமியார்கள், குறி சொல்லும் பெண்கள் சாமி ஆடும்போது கர்ஜிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நிச்சயம் நீங்கள் எல்லாரும் கண்டிருப்பீர்கள். அது எந்த ஆவியால் நடைபெறுகிறது என்பதை நான் விளக்காமலே அறிவீர்கள். ஆனால் வேத புத்தகத்தில் எங்காவது ஒரே ஒரு இடத்திலாவது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கர்ஜித்ததாகவோ, ஆடியதாகவோ, நடுங்கியதாகவோ எங்காவது வாசித்திருக்கிறீர்களா? அல்லது ஆவியால் நிரப்பப்பட்டு விழுந்ததாகவோ, சிரித்ததாகவோ வாசித்திருக்கிறீர்களா? வேதத்தில் இயேசுவின் சீஷர்களுக்கோ ஆதி புதிய ஏற்பாட்டு சபை விசுவாசிகளுக்கோ காணப்படாத இப்படிப்பட்ட அனுபவம் இவர்களுக்கு எப்படி வந்தது? இது மாரியம்மன் பண்டிகையில் துர்கா அல்லது காளியம்மன் பண்டிகையில் சர்வசாதாரணமாக பலர் ஆடிக்கொண்டு கர்ஜித்துக்கொண்டு வருவதை நாம் எல்லாரும் கண்டிருக்கிறோமே! அந்த அனுபவம் இவர்களுக்கு எப்படி வந்தது? என்று தெரியவில்லை? தயவுசெய்து அதை கற்றுக்கொள்ளாதீர்கள்.

Dr.பால்தினகரன்

கேள்வி: (KERALA) Suriya TVயில் அடிக்கடி பிரசங்கம் செய்யும் தேவசியா முல்லக்கரா என்ற பிரசங்கியார் தான் சகோ.DGS.தினகரன் அவர்கள் கையால்தான் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றேன். என்கிறாரே? தமிழ்நாட்டில் சகோ.தினகரனைப்பற்றி உங்களுக்கு தெரியுமே! அது உண்மையா?பதில்: முல்லக்கரா பிரசங்கியார் அப்படி கூறியது உண்மையானால் அவர் பொய் சொல்கிறார் என்று தைரியமாக கூறலாம். இவர் சகோ.தினகரனைப்போல் ஜெபத்தில் வியாதியின் பெயரை குறிப்பிட்டு கூப்பிடுவது போல், வியாதியஸ்தரை சுகமாக்கும் இவரின் தவறான முறையைபோல் இதுவும் பொய்யானதே. காரணம் 1969ம் வருடம் முதல் சகோ.DGS.தினகரன் ஊழியம் தொடங்கும் முன்னரே அவரை நன்றாக அறிந்திருப்பவன், அதன்பின் 1974வரை எங்களோடு சகோ.தினகரன் அவர்கள் இணைந்து ஊழியம் செய்தவர் என்ற முறையிலும், அவரோடு ஒரே அறையில் படுத்து ஒன்றாக பயணம் செய்து, ஒன்றாக ஊழியம் செய்த அனுபவத்தில் கூறுகிறேன். இதுவரை சகோ.தினகரன் அவர்கள் யாருக்கும் தன் கையால் ஞானஸ்நானம் கொடுத்ததே இல்லை, அவருக்கும் எனக்கும் தொடர்பு அறுந்து அவர் மரணம்வரை யாருக்கும் அவர் ஞானஸ்நானம் கொடுத்ததில்லை என்பதையும் நான் அறிவேன்.

சகோ.தினகரன் நடத்திய School of Evangelism என்ற பெயரில் 10 நாட்கள் பயிற்சி கூட்டங்களில் ஒருவேளை முல்லக்கரா அவர்கள் கலந்துக்கொண்டிருப்பார். அங்கிருந்துதான் ஜெபத்தில் வியாதிகளின் பெயர் அழைப்பதும், சுகமளிக்கும் ஊழியமும் கற்றிருப்பார். அங்கும் சகோ.தினகரன் ஞானஸ்நானம் உபதேசம் கூறியிருக்கமாட்டார் என்பதை நிச்சயமாக அறிவேன்.

சகோ.முல்லக்கரா அவர்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஜெபிக்கும்போது அடுத்த வருடம் உங்களுக்கு ஒரு குழந்தையை இயேசு கர்த்தர் நிச்சியம் கொடுப்பார். அப்படி ஒரு குழந்தை உங்களுக்கு பிறக்காவிட்டால் நான் என் மகளை உங்களுக்கு கொடுத்துவிடுகிறேன் என்றார். அந்த தம்பதிகளுக்கும் இதுவரை குழந்தை பிறக்கவில்லை – இவரும் தன் பிள்ளையை தான் வாக்களித்தப்படி அந்த தம்பதிகளுக்கு கொடுக்கவும் இல்லை. இப்படி ஒரு வாக்கை பொதுமக்கள் முன்னால் யாராவது கொடுப்பார்களா? நான் ஜெபித்து குழந்தை பிறக்காவிட்டால் என் குழந்தையை நான் கொடுத்துவிடுகிறேன் என்பதே சரியான விசுவாசம் அல்லவே!


கேள்வி: ANGEL TV இரட்டையரில் ஒருவர் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மூலமாக கர்த்தர் உரைத்த தீர்க்கதரிசன வார்த்தைகள் துண்டுப்பிரதியாக அச்சடித்து இங்கு எல்லாருக்கும் விநியோகிக்கிறார்கள். இத்துடன் அதை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?பதில்: அந்த தீர்க்கதரிசனத்தை நீங்கள் அனுப்பிய துண்டுபிரதியில் மட்டுமல்ல, ஏஞ்சல் TVயில் 24மணிநேரமும் பல வாரங்கள் தொடர்ந்துக்காட்டினார்களே! பைபிள் ஒழுங்காக வாசிக்காதவர்களுக்கெல்லாம் அது ஆச்சரியமாக இருந்திருக்கலாம். மற்ற விசுவாசிகள் அது சுய விளம்பரம் என்பதை நன்றாக விளங்கிக்கொண்டார்கள் என்பது எனக்கு வந்த பல கடிதங்கள்மூலம் அறிந்தேன்.

முதலாவது நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டியது. வேதபுத்தகம் முழுவதும் எழுதி கொடுத்தப்பின் இப்போது தீர்க்கதரிசனம் மூலம் கர்த்தர் பேசுவதில்லை. காரணம், இனி வரப்போகிற ஆபத்துக்கள்,கொள்ளை நோய்கள், பூமி அதிர்ச்சிகள், கடல் அலை (சுனாமி) பெருகுவது யாவையும் சுவிசேஷ புத்தகத்தில் மத்.24, லூக்.21, மாற்.13,2, தெச.2:9, வெளிப்படுத்தின விசேஷம், பழைய ஏற்பாட்டில் தானியேல் போன்ற சில தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டவைகளையும், நம் வேதப்புத்தகத்தில் அப்படியே தெள்ளத்தெளிவாக எழுதி நம் கையில் கொடுக்கப்பட்டுவிட்டதே! இதில் எழுதாத, எதையாவது இவர்கள் புதிதாக கூறியிருக்கிறார்களா? இல்லையே! இவர்கள் தீர்க்கதரிசனம் என்று கூறியது அத்தனையும் வேதத்தில் அப்படியே எழுதியிருக்கிறதைத்தானே கூறியிருக்கிறார்கள்!

மேலும் தம்பி.வின்சென்ட் செல்வகுமார் தான் எங்கு போய் பிரசங்கம் செய்தாலும் மக்களை இதே பாணியில் எச்சரிப்பதை இவரின் முந்தைய பிரசங்க CDக்களை கேட்டுப்பாருங்கள். அதை கேட்டால் ஊட்டியில் பேசியதை விசேஷமானதாக கூறமாட்டார்கள். அவர் ஊட்டியில் செய்தது நல்ல பிரசங்கம். ஆனால் அது தீர்க்கதரிசனம் அல்ல. உதாரணத்துக்கு ஒன்று கூறுகிறேன். காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதையை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

பழைய ஏற்பாட்டு நியாயபிரமாணமும், 10 கட்டளைகள் யாவையும் தனித்தனியாக கைக்கொள்ள முயற்சித்து கஷ்டப்படவேண்டாம் என்பதற்காக வெகு எளிதானமுறையில் உன்னைப்போல் பிறனை நேசி என்று இரத்தின சுருக்கமாக சொன்னாரே, அதில் நியாயப்பிரமாணமும், 10 கட்டளைகளும் அப்படியே அடங்கியிருக்கிறதே. அதேபோல் வேதத்தில் ஆங்காங்கு எழுதப்பட்ட தீர்க்கதரிசன செய்திகளை நீங்கள் தியானித்தால்போதும் புத்தியுள்ள 5 கன்னிகைகளின் ஆயத்தம் நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வரப்போகும் ஆபத்துக்கள் வந்துகொண்டிருக்கும் இயற்கைமாற்றங்கள், பூமி அதிர்ச்சியிலும், வானத்திலிருந்து சூரியன் விழுந்தாலும் நமக்கு பயம் இருக்காது.

சகோ.வின்சென்ட் செல்வகுமார் எழுதியதாக நீங்கள் அனுப்பிய துண்டுப்பிரதியிலே அவரே தன்னைப்பற்றி எழுதியிருக்கிறார். கடைசி காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள், அவர்கள் மக்களை வஞ்சிப்பார்கள் என்றாரே, அதுதான் அவர் எழுதியதில் நூற்றுக்குநூறு உண்மை. அவர் தன்னைப்பற்றியும், தன் நண்பர் ஏஞ்சல் TV சகோ.சாது சுந்தர் செல்வராஜைப்பற்றியும் தெளிவாக அந்த துண்டுபிரதியில் அறிவித்துவிட்டார். இது அவரையும் அறியாமல் நடந்த விஷயம்.

பரலோக கமிட்டியில் மோசேயின் பக்கத்து சீட் சாது சுந்தர் செல்வராஜ்க்காக ரிசர்வ்செய்யப்பட்டிருக்கிறது. அதில் யாரும் உட்காரமாட்டார்கள் என்று கர்த்தர் சொன்னதாக அவர் சொல்வதை அந்த நிகழ்ச்சியில் அவருக்கு முன்னால் ஆடாமல் அசையாமல் இமை சிமிட்டாமல் தலையாட்டுவதற்காகவே உட்கார்ந்திருக்கிற நபர், முடி கத்திரிக்கிறவனுக்கு முன்பாக மௌனமாக இருக்கிறவர் என்று வேதம் வர்ணிக்கிறதைப்போல பரிதாபமாக சாதுவுக்கு முன் உட்கார்ந்திருக்கும் அந்த தம்பி எதையும் எதிர்த்துபேச துணியாமல் இருப்பதைப்போல, அதே நிகழ்ச்சியை பலமுறை திரும்பதிரும்ப தினசரி ஏஞ்சல் டிவியில் போட்டு காண்பிப்பதை பார்த்த எவரும் இப்படிப்பட்ட பச்சை பொய்யை எப்படி ஐயா துணிந்துபேசுகிறீர்கள் என்று கேட்க துணியவில்லையே! அப்படி துணிந்திருந்தால் நிச்சயம் அப்படிப்பட்ட நபர் அதன் காப்பியை ஜாமக்காரனுக்கு அனுப்பியிருப்பார். ஆக இப்படிப்பட்டபரலோக கமிட்டி புளுகுகள்போலதான் வின்சென்ட் செல்வகுமாரின் ஊட்டி தீர்க்கதரிசனம் ஆகும்.

பொய்யான பரலோக கமிட்டியை சகோ.வின்சென்ட் செல்வகுமாரும் எப்படித்தான் ஆதரிக்கிறாரோ தெரியவில்லை. அவர் தன் பத்திரிக்கையில் எழுதுவதற்கும் இதுபோல பொய்யான பரலோக கமிட்டியை ஒத்துக்கொள்வதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பத்திரிக்கையில் சரியாக எழுதுகிறார். ஆனால் சாதுசுந்தர் செல்வராஜுடன் இணைந்து பேசும்போது சாது பேசும் பொய்களுக்கு உடந்தையாகி

மோகன் சி.லாசரஸ்

கேள்வி: நானும், என்னோடு சில டாக்டர்களும் சகோ.மோகன்.சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்களை நேரில் சந்தித்து மனம்விட்டு பேச நினைக்கிறோம். என் பெற்றோர் மோகன் சி.லாசரஸ் அவர்களை மிகவும் நேசிப்பவர்கள். அமெரிக்காவில் உள்ள என்னையும், எங்களையும் அவர் ஊழியத்துக்கு தொடர்ந்து காணிக்கை அனுப்ப என் பெற்றோர் கட்டாயப்படுத்துவார்கள். நாங்களும் ஏராளமான பணத்தை அவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். உங்கள் ஜாமக்காரனை வாசித்தபின் எங்கள் உள்ளத்திலும் ஏராளமான கேள்விகள் மோகன் சி.லாசரஸ்ஸைப்பற்றி எழும்புகிறது. நாங்கள் அவரை சந்தித்தால் எதை முக்கிய விஷயமாக அவரிடம் கேட்கவேண்டும்?

பதில்: நீங்கள் ஜாமக்காரனை வாசித்த பிறகுதானே உங்களுக்கு அவரிடம் கேள்விகேட்க தோன்றியது. வாசித்த எந்த பகுதியைப்பற்றி அல்லது எந்த விஷயத்தைப்பற்றி கேட்க உந்தப்பட்டீர்களோ அதையே கேளுங்களேன்! ஆனால் பதில் நீங்கள் எதிர்ப்பார்த்தைப்போல் அவரிடமிருந்து கிடைக்காது. எழுதுபவர்கள் எழுதிக்கொண்டேயிருப்பார்கள். நாம் கர்த்தருக்கு செய்யவேண்டியதை செய்வோம். நீங்கள் என்னையும், நான் செய்யும் என் ஊழியத்தையும் உண்மை என்று நீங்கள் நம்பினால் எனக்கு உதவுங்கள். இல்லையென்றால் மற்றவர்கள் என்மேல் சேற்றை வாரியிறைப்பதைப்போல் நீங்களும் செய்யலாம். மேற்கொண்டு இதைக்குறித்து எதையும் என்னிடம் கேட்காதீர்கள். இப்படித்தான் அவர் பதில் இருக்கும். உங்களைப்போல் பலர் அவரை கண்டு நேரில் கேட்ட கேள்விகளுக்கு இதையேதான் மனப்பாடம் செய்து கூறுவதைப்போல் பதிலாக கூறியுள்ளார். ஆனால் நீங்கள் படித்தவர்கள் பலவருடம் உங்கள் பெற்றோர் வேண்டுகோளின்படி நீங்கள் பெருந்தொகையை காணிக்கையாக கொடுத்துள்ளீர்கள்.

ஆகவே கேள்விகேட்க உங்களுக்கு உரிமையுண்டு. அவர் பேசும்போது அவர் எப்படி சமாளித்தாலும் நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றிய கேள்விக்கான பதிலை அவரிடமிருந்து பெற மிகத்தெளிவாக, உறுதியாக இருங்கள்.

பொய் தீர்க்கதரிசி
2010ம் ஆண்டுக்கான மோகன் சி.லாசரஸ் அறிவித்த தீர்க்கதரிசனம் CDயைப்பற்றி எல்லாரும் அறியவேண்டும் என்பதற்காக 15ரூபாய்க்கு சலுகை விலையில் ஆயிரக்கணக்கில் அனுப்பியும், விற்றும் வருகிறார்கள். அதில் 2010ம் ஆண்டில் தமிழ்நாட்டில் லஞ்சம் இருக்காது, வியாதி இருக்காது, வியாபாரம்செழிக்கும், விளைச்சல் பன்மடங்கு பெருகும், நாடு சமாதானமாக இருக்கும். இன்னும் பல தீர்க்க தரிசனங்களை கர்த்தர் காட்டினார் என்று அவர் அறிவித்துள்ளார். இதில் ஏதாவது ஒன்றாகிலும் நடைமுறையில் சாத்தியப்படுமா? அவர் கூறிய தீர்க்கதரிசனம் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா?என்று கேளுங்கள். அதோடு அவர் 2010ம் ஆண்டு இன்னும் பூர்த்தியடையவில்லையே என்பார். ஒரு வருடத்தில் ஏறக்குறைய பாதி மாதங்கள் முடியப்போகிறது. அதில் கையளவு மாறுதலின் அடையாளமாக ஒரு மேகம்கூட காணவில்லையே!

உதாரணத்துக்கு தமிழ்நாட்டு ரேஷன் அரிசி தினசரி லாரிலாரியாக வெளிமாநிலத்துக்கு கடத்தும்போது பிடிபட்டதாக செய்தியை தினம் கேட்கிறோம், டிவியிலும் பார்க்கிறோம். இப்போதுலாரியில் கடத்தியவர்கள் கப்பல் கப்பலாக டன்டன்னாக வெளிநாடுகளுக்கு ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு போகிறார்களே! அவைகளை எந்த ரேஷன் கடையிலிருந்து கடத்தப்பட்டது என்பதையும் அதன் கடை உரிமையாளரையும் இதுவரை கைது செய்ததாக செய்தி உண்டா? ஒருவனை கைது செய்தால் போதும் கடத்தல் லைசன்ஸ் வழங்கியவரை பிடிக்கலாமே? லாரி டிரைவரை பிடித்து விசாரித்தால் எங்கிருந்து அந்த ரேஷன் அரிசி ஏற்றப்பட்டது என்பதை அறியலாமே! ஒரு ரூபாய் அரிசியை அந்த ரேஷன்காரர் விலை கொடுத்தா வாங்கியிருப்பார்? இல்லையே! ரேஷன் கடையில் அதிகாலை தொடங்கி இரவுவரை கூலி வேலைக்கும்போகாமல், மதிய உணவு சாப்பிடபோகாமல் நட்டநடு வெயிலில் அந்த ஒரு ரூபாய் அரிசிக்காக இளவுகாத்த கிளிப்போல் ஜனங்கள் குறிப்பாக பெண்கள் காத்துகிடந்து கடைக்காரர் அருகே நெருங்கும்போது வந்த அரிசி முழுவதும்போட்டு முடித்துவிட்டோம், அரிசி தீர்ந்துபோய்விட்டது. உள்ளே பாருங்கள் எங்காவது அரிசியிருக்கிறதா? என்பார் அந்த ரேஷன் கடைக்காரர். சத்திய சந்தராக அவர் கூறும் வார்த்தைக்கு சாட்சியாக காலி சாக்குபைகளை அவர் விரித்து காண்பிக்க வயிறு எரிந்து செல்லும் மக்களின் நிலை யோசித்து பாருங்கள். இனி அடுத்த மாதம்தான் அரிசி வரும் என்று கூறினால் மீதியுள்ள அரிசி கிடைக்காத ஆயிரக்கணக்கான ஏழைமக்கள் சாப்பிட என்ன செய்வார்கள். அதே ஒரு ரூபாய் ரேஷன் அரிசி பக்கத்து கடையில் 35 ரூபாய்க்கு விற்கிறார்களே! அவர்களுக்கு ரேஷன் அரிசி எப்படி கிடைத்தது? இவைகள் போலீஸ்க்கு தெரியாதா? மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு (சிவில் சப்ளை) இது தெரியாதா? அரிசிக்கான விலைகொடுக்காமலே மக்களின் அரிசி, லாரிகளிலும், கப்பல்களிலும்போய்கொண்டிருக்கிறதே! எப்படி பத்து லாரிகள் அல்லது 10 கப்பல்களுக்கு ஒரு லாரி அல்லது ஒரு கப்பல்மட்டும் பிடிப்படுகிறது? பிடிப்படுகிறது அல்ல – பிடிகொடுக்கிறார்கள். திருவனந்தபுரம் (சாலைஎன்ற இடத்தில்) தமிழ்நாட்டு ரேஷன் அரிசி விற்பதை TVயில் கண்டுபிடித்து காட்டினார்களே! அந்த அரிசியை யாரிடமிருந்து வாங்கினார்கள் என்பதை நம் போலீஸ் கண்டுபிடிப்பதா கடினம்!

அந்த கோடிகளில் லஞ்சமாக அதன் பங்கு யார் யாருக்கு எவ்வளவு விகிதம் பிரித்து கொடுக்கப்பட்டது என்பதை கேள்விப்படும்போது 1 ரூபாய் அரிசி தமிழ்நாட்டுக்கு குறிப்பாக வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு உதவுவதற்காக சட்டம்போட்டு மக்களுக்கு வழங்கிய கொடை வள்ளல்களுக்கு வேறு பெயர்களில் அந்த லஞ்சப்பணம் போய்சேரும் அந்த அவலத்துக்கு பெயர் என்ன?லஞ்சம்தானே!

லஞ்சம் இல்லாத தமிழ்நாடு 2010ல் உண்டாகும் என்று கூறிய பொய் தீர்க்கதரிசனத்தைக்குறித்து மெத்த படித்த நீங்கள், மோகன் சி.லாசரஸ்க்கு காணிக்கை கொடுத்து உதவிய நீங்களாவது அவரிடம் துணிந்துகேட்டு அவர் அளித்த பதிலை எனக்கு தெரிவியுங்கள். இது கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களையே ஏமாற்றுவதல்லவா?

வியாதி இல்லாத தமிழ்நாடு என்று கூறியுள்ளார். இன்று ஒவ்வொரு வீட்டிலும் மனநோயாளிகள், மூளை வளர்ச்சியற்ற பிள்ளைகள், FITS இழுப்புவியாதி உள்ளவர்கள், கேன்ஸர் போன்ற வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போவதை நீங்கள் யாரும் அறியவில்லையா?

சர்க்கரைவியாதி என்றும் இல்லாத அளவு பெரும்பாலான வீடுகளில் பெருக்கம் அடைந்துள்ளதே உங்களில் யாரும் இதை அறியவில்லையா? அந்த வியாதிகள் ஏதாவது சுகம் அடைந்துள்ளதா?இதைப்பற்றி உங்களுக்கு அவரிடம் கேள்விகேட்க தோன்றவில்லையா?

தமிழ்நாட்டில் 2010ல் வியாதி இல்லை என்றால் வீதிக்கு 3 தனியார் மருத்துவமனைகள் பெருக காரணம் என்ன? வியாதியஸ்தார்கள் பெருகாமல் மருத்துவமனை பெருகுமா?

எப்படி தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள், குருமார்கள், பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள், பிஷப்மார்கள் யாவரும் ஏதோ விழுங்கி அஜீரணமான நிலையில் எதையும் பேசமுடியாதபடி அவர் பக்கத்தில் உட்கார்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார்கள்?

கடந்த காலத்தில் HIV வியாதி சுகமாயிற்று என்று பொதுமேடையில் பகிரங்கமாக இவர் கூறினாரே! தான் சொன்ன இந்த ஜமக்காளத்தில் வடிக்கட்டின பொய்க்கு அருகே இயேசுகிறிஸ்து நின்றுக்கொண்டு என்னிடம் கூறுகிறார் என்று இவரின் பொய்சாட்சிக்கு இயேசுவையும் இழுத்தாரே! அந்தHIV நபரின் கதி என்ன? ஏன் அவர் சுகமாகவில்லை? மோகன் சி.லாசரஸ்ஸாகிய நீங்கள் கூறியது பொய்யா? அருகே நின்றுசொல்ல சொன்னதாக கூறிய இயேசு சொன்னது பொய்யா? இந்த அண்ட புளுகுக்கு இதுவரை யாருக்கும் பதில்சொல்லாத இவரா நீங்கள் அனைவரும் கூட்டமாக போய் அவரிடம் கேள்வி கேட்கும்போது உங்களுக்கு பதில் சொல்வார்?

2010க்கான அவர் கூறிய தீர்க்கதரிசன CDக்களை கொண்டுபோய் அவர்முன்னே போட்டு உடைத்து கிறிஸ்தவர்களைத்தான் இதுவரை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் ஏமாற்றினீர்கள்! இப்போது இந்த 2010 தீர்க்கதரிசன CDமூலம் முழு தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளீர்களே! என்று கேட்க தோன்றுகிறது என்று ஒருவர் எனக்கு எழுதினார். அது உண்மையான உணர்வு ஆகும்.

தமிழ்நாட்டு மக்கள் உங்கள்மீது பொது வழக்கு போட்டால் கர்த்தர் சொன்னார் அதனால் சொன்னேன் என்று நீதிபதியின்முன் கூறி சமாளிக்க முடியாதே! நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாதே! அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கலாமே!

மோகன் சி.லாசரஸ் போலவே கடவுள் பெயர் கூறி பொய் சொன்னவர்கள், பொய் தியானம்நடத்தியவர்கள், காவி உடை, காவியில்லாத உடை அணிந்த சன்னியாசிகள், பாபாக்கள், யோகிகள், இப்போது மளமளவென்று ஜெயிலுக்குள் போய்கொண்டிருக்கிறார்கள். கர்த்தருக்கு அவமானம் உண்டாகாமல் இருக்க மோகன் சி.லாசரஸ் பதில் கூறிவிட்டாலும் இனி தீர்க்கதரிசனம் கூறாதிருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படாமல் காப்பாற்றச் சொல்லுங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறாது என்பதை அறிவேன். என்றாலும் இப்படி நாலுபேர் கேள்வி கேட்டால் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

வேனிலும், பஸ்ஸிலும், லாரிகளிலும் நாலுமாவடி சென்று தங்கள் பெயரை ஜெபத்தில் அழைக்கமாட்டாரோ என்று ஏங்கி செல்லும் ஆட்டுமந்தைகள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அகப்பட்டநித்யானந்தரை தேடிச்சென்றவர்களைப்போல் அவமானமடையாமல் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருங்கள். படித்தவர்கள், பட்டதாரிகள், பேங்க் உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் மோகன் சி.லாசரஸ்ஸை நம்புவதால் அவர் ஜெபத்தில் உரைப்பது உண்மை என்றாகிவிடாது.

நித்யானந்தரைப்போய் பார்த்து காலில் விழுந்தவர்களை பாருங்கள். நீதிமன்ற நீதிபதிகள், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், MLA, MPமார்கள், மந்திரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள் இத்தனை மெத்த படித்தவர்கள் அவரிடம் சென்று ஏமார்ந்தவர்களாகி தங்கள் பெயரையும் கெடுத்துக்கொண்டார்கள் அவர்கள் அனைவரும் அந்த ஏமார்ந்தவர்களின் பட்டியலில்தானே இருக்கிறார்கள்? கேள்வி கேட்கப்போகிறோம் என்ற எண்ணத்துடனும், ஜெபத்துடனும் செல்லுங்கள். அவர் பேச்சில் மயங்கி ஜெபத்துக்கு உங்கள் தலையை நீட்டிவிட்டு வந்துவிடாதீர்கள்!

சில வருடங்களுக்குமுன் பல குற்றசாட்டுகளுக்கு ஆளாகிய ஒரு பிரபல ஊழியரிடம் நேரில் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. சம்பாஷனையின் முடிவில் அவர் ஜெபிப்போம் என்றார். உடனே நான் மன்னித்துக்கொள்ளுங்கள், இப்போது இந்த நிலையில் நீங்கள் செய்யும் ஜெபம் போலியானதாகக்தான் இருக்கும். நான் என் இடத்துக்கு திரும்பி சென்று நானே ஜெபித்துக்கொள்கிறேன் என்று கூறி விடைப்பெற்றேன்.

உங்கள் நிலையில் நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால், தேவ பார்வையில் உங்கள் தனிப்பட்ட ஜெபத்தில் உங்களுக்கு குற்றவுணர்வு இல்லாதிருந்தால், உங்கள் கேள்வியிலும், உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் ஊழியத்திலும் உண்மையிருந்தால் மட்டுமே தைரியமாக ஒரு ஊழியக்காரன்முன் கேள்விகள் கேட்டு பேசமுடியும்

பென்னிஹின்

கேள்வி: ஊதி கீழே விழத்தள்ளும் சிறப்புபெற்ற அமெரிக்க ஊழியர்.பெனிஹின் தன் மனைவியை தள்ளிவிட்டாராமே!

பதில்: இவர் தள்ளவில்லை. ஜாய்ஸ்மேயர் தன் கணவனை தள்ளிவிட்டதைப்போல், பெனிஹின் மனைவி இவரைவிட்டு தள்ளிபோய்விட்டார்.

பெனிஹின் குடும்பத்தில் இப்போது விவாகரத்து நடக்கப்போகிறது. பெனிஹின் அவர்கள் தனிப்பட்டமுறையில் ஊழியர்களுக்கும், மீடியாக்களுக்கும் எழுதின கடிதம் எனக்கும் வந்தது. எப்படி என் விலாசம் கிடைத்ததோ அறியேன். அதில் வழக்கம்போல பெனிஹின் அவர்கள் நிறைய பொய் பேசியுள்ளார். தன் மனைவி தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் எனக்கு அவர் விவாகரத்து பெறவிரும்புகிறாள் என்று தெரியும், அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது, அது என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் புரியாத அதிர்ச்சி செய்தியாகும் என்று எழுதியுள்ளார்.

மனைவி தன்னைவிட்டு வெளியேறி பல மாதங்கள் ஆகிறது. சத்தமில்லாமல் ஓசையின்றி வெளியேறியிருப்பாரா? இத்தனை மாதம் தன்னை விட்டுவிலகி வாழும் தன் மனைவியைப்பற்றி இவர் ஏன் விசாரிக்கவில்லை? பெனிஹின் அதை விசாரிக்கமாட்டார்! அவள் இவரைவிட்டு போகக் காரணம், இவருக்கே தெரியுமே! அந்த கடிதத்தில் பல பொய்களை வாரி இறைத்துள்ளார். வக்கீல் நோட்டீஸ் மனைவியிடமிருந்து வரும்போது அந்த நோட்டீசில் விவாகரத்துக்கான காரணம் காட்டியிருக்கமாட்டார்களா? காரணம் சொல்லாமல் வக்கீல் நோட்டீஸ் நிச்சயமாக அனுப்பமுடியாதே!

பிரபல பெந்தேகோஸ்தே ஊழியரும், அக்கினி அபிஷேகம் கூட்டங்கள் நடத்துபவரும்,இயேசுவும் வியாதியாக இருந்தவர்தான் என்றவருமான சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் எனக்கு அனுப்பிய வக்கீல் நோட்டீசிலேயே காரணம் குறிப்பிட்டபோது, எனக்கு புருஷன் வேண்டாம் என்று வக்கீல் மூலம் மனைவி ஒருவள் தன் கணவனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் அதற்கான காரணம் எழுதியிருக்கமாட்டாள்! இதற்கு பெயர்தான் காதில் பூ சுற்றுவது.

பாஸ்டர்.பால்தங்கையா (பெங்களுர்) அசம்பளீஸ் ஆப் காட் சபை பாஸ்டர், பிரபல பாட்டுக்காரர், பிரசங்கியார் ஆவார். இவர் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். பலமாதங்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். அதனால் உதவி பாஸ்டரோடு இணைத்து பேசப்பட்டார். வெளியில் பிரபல தொழில் அதிபரோடு இணைத்துப்பேசபட்டார். சில மாதங்கள் எங்கிருக்கிறார் என்று இவருக்கும் தெரியாமல், சபை மக்களுக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறுவது பரிசுத்தாவி பெற்று, அந்நியபாஷை பேசி, பெண்கள் கூட்டத்தில் பிரசங்கிக்கும் ஒரு பாஸ்டரின் மனைவிக்கு இது சாட்சியாகுமா?

பெங்களுரில் பல பாஸ்டர்கள் கூடி இவர்களை சமாதானப்படுத்தி ஒன்றாக இணைந்து வாழ முயற்சி எடுத்தார்கள். இரண்டு பேரும் இணங்கிவரவில்லை.

இவர்கள் இரண்டு பேரும் சபை மக்களுக்கு என்ன உபதேசிப்பார்கள். இவர்கள் பேசினஅந்நியபாஷை மாய்மாலமானது என்பது இப்போதாவது விளங்குகிறதா? பணம் கோடிகள் இருந்தென்ன சொந்த வாழ்க்கையில் ஒரு ஊழியக்காரனுக்கு வீட்டில் சமாதானம் இல்லை, மனைவி இல்லை என்றால் அந்த வாழ்க்கை நரகமல்லவா?

இவர்களுடைய மகன் அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணை காதலித்துவிட்டார் இதுதான் பாஸ்டர்.பால்தங்கையா, அவர்களின் மனைவி பாஸ்டரைவிட்டு பிரிந்து போன பிரச்சனைக்கு மையக்காரணம் என்று பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது அல்ல பிரச்சனையின் மையக்காரணம், இதற்கும் அப்பால் பிரச்சனைக்கான வேர் இருக்கிறது. அது பாஸ்டர்.பால்தங்கையாவுக்கும், அவர் மனைவிக்கும் குடும்பத்தில் உள்ள இரண்டு பேர்களுக்கும், உடன் ஊழியர் ஒருவருக்கும் மட்டுமே அறிந்த விஷயமாகும். பாஸ்டர்.பால்தங்கையாவின் வாய்மொழி வார்த்தைகளை வைத்தும், சபைமக்கள், மற்ற பாஸ்டர்மார் யாவரும் வெளிப்படையாக அறிந்த விஷயத்தை வைத்தும் இப்பிரச்சனையை விவாதித்தார்கள். ஆனால் பாஸ்டர் அவர்களின் பதில் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

மகன் காதலித்த பெண் விக்கிரகத்தை ஆராதிக்கும் இந்துமதத்தை சேர்ந்த பெண் அல்ல – கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவள். ஆங்கிலிக்கன் சபையை சேர்ந்தவள். இதில் பிரச்சனை என்ன? காதல் என்று வந்துவிட்டால் அப்பா என்றும், அம்மா என்றும் இரட்சிக்கப்பட்டவள், இரட்சிக்கப்படாதவள் என்று பார்ப்பதில்லையே! பாசம் எல்லாம் வழுக்கிக்கொண்டு போவதுதான் காதல். இப்படியிருக்க மகனின் இந்த தொடர்பு காரணமாக பாஸ்டர் மனைவி மகனை சப்போர்ட் செய்வது பாஸ்டருக்கு பிடிக்கவில்லை. இதுதான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்கிறார்கள். பாஸ்டர் அவர்களின் சொந்த திருமணத்திலேயே தகராறு இருக்கிறதே. ஆகவே மகனின் காதல்திருமணம் ஒரு காரணமல்ல, மகனின் காதல் காரணமாக பாஸ்டர் மனைவி வீட்டைவிட்டு பலமாதங்கள் பிரிந்து வாழ்வாரா? இவர் வெளியிலிருந்து வந்து ஞாயிற்றுகிழமை சபை பெண்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுமிருக்கிறார். என்ன சாட்சி இது. புருஷன் சில விஷயத்தில் ஒத்துப்போகவிட்டால் உங்களைப்போல் புருஷனை பிரிந்து வேறு வீட்டில் குடியிருக்கலாமா என்று சபை பெண்கள் கேட்டால் பாஸ்டர் மனைவி என்ன பதில் சொல்வார் அல்லது பாஸ்டர்தான் என்ன பதில் சொல்வார்.

புருஷன் மனைவி பிரிந்து வாழ்ந்தாலே பாஸ்டர் தன் பதவியை இழக்கவேண்டும். காரணம் நியாயம் எதுவானாலும் வேதவசனத்தின்படி 1 கொரி 7:5ல் உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி,ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள். உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு மறுபடியும் கூடி வாழுங்கள்.

விவாகம் பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது:மனைவியானவள் தன் புருஷனை விட்டுப்பிரிந்து போகக்கூடாது……. புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. 1 கொரி 7:10.

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுவது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படி செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை. ஏன் நஷ்டத்தை பொருத்துக்கொள்ளுகிறதில்லை. நீங்களே அநியாயஞ்செய்கிறீர்களே! 1கொரி 6:7.

மேலே வாசித்தது பவுலின் சொந்த கருத்தல்ல. விவாகம் செய்தவர்களுக்கு கர்த்தர் சொல்லசொன்ன விசேஷ ஆலோசனையைத்தான் பவுல் அறிவிக்கிறார். இது ஆலோசனை அல்ல. கர்த்தரின் கட்டளை. இவ்வளவு தெளிவாக வேதவசனம் சொல்லியிருக்க பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன், அக்கினி அபிஷேகம் பெற்றுக்கொண்டேன், விதவிதமான அந்நியபாஷை பேசுகிறேன். கர்த்தர்தான் என்னை அந்நியபாஷை பேசவைத்தார் என்று கூறும் இத்தனை பிரபலமான பெந்தேகோஸ்தே பாஸ்டர்களுக்கு மேலே கூறப்பட்ட கர்த்தரின் கட்டளை தெரியாதா?

இன்று குடிக்கார புருஷனை உடைய மனைவிமார்கள், இரண்டு மனைவியோடு வாழும் புருஷனை உடையவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பம் நடத்தும் எத்தனையோ பெண்கள் புருஷனைவிட்டு பிரியாமல் வாழும்போது, மற்றவர்களுக்கு உபதேசிக்கும் இப்படிப்பட்ட ஊழியர் குடும்பம் சேர்ந்து வாழவேண்டியது எவ்வளவு முக்கியம். அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும், நம்பும் என்று வேதம் கூறுகிறது. இவர்களின் அன்பில் எங்கோ தகராறு இருக்கிறது.

சென்னை அயனாவரம் அசம்பளிஸ் ஆப் காட் சபை பாஸ்டரும், பாஸ்டர்.பால்தங்கையாவும்இதே பிரச்சனையில் அகப்பட்ட இன்னும் ஏராளமான பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும்மனைவியுடன் மறுபடியும் சேர்ந்து வாழும்வரை இவர்கள் யாரும் சபையை நடத்தக்கூடாது.இவர்கள் ஊழிய உயர்வைக்கண்டு கோபப்பட்ட பிசாசு இவர்களை சோதித்துவிட்டான் என்றோ, பிசாசு இவர்கள் குடும்பத்தை பிரித்து ஊழியத்தை கெடுக்கிறான் என்றோ பிசாசின்மேல் எளிதாக பழியைபோட இவர்கள் முயலுவார்கள். வேதம் பிசாசுக்கு இடம்கொடாதிருங்கள் என்று எச்சரிக்கிறது. இவர்களாக பிசாசுக்கு இடம் கொடுத்ததால்தான் பிசாசு இவர்கள் வாழ்க்கையில் நுழைந்தான். அவனாக இவர்களுக்குள் வர கர்த்தர் உத்தரவு கொடுக்கவில்லை.

யோபு பிசாசால் சோதிக்கப்பட்டான் என்று இவர்கள் கூறுவார்கள். ஆனால் யோபு பாவம் எதுவும் செய்யவில்லை. பாவமே செய்யாமல் பிசாசால் சோதிக்கப்பட தேவனால் யோபு அனுமதிக்கப்பட்டான். ஆனால் இவர்கள் விஷயத்தில் நடந்ததே வேறு.

(பாஸ்டர்) ஒருவன் தன் சொந்த குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை எப்படி (நடத்துவான்) விசாரிப்பான். 1தீமோ 3:5.

வேதம் இப்படி தெளிவாக கூறியுள்ளபோது மேலே உள்ள வசனங்களை அசட்டை செய்யும் இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களை, சபையில் உள்ள மூப்பர்கள், சபையில் உள்ள விசுவாசிகள்கூடி இவர்களை தைரியமாக கேள்வி கேட்கவேண்டும். இப்படி பாஸ்டர்களை கேள்வி கேட்பது சபை பாஸ்டர்மார்களை அவமானப்படுத்த அல்ல – அவர்களை சரிப்படுத்த, நல்ல சாட்சியுள்ள மேய்ப்பனாக மாற்ற கேள்விகேட்பது நல்லது. அப்போதுதான் இப்படிப்பட்ட பாஸ்டர்களுக்கு பயம் உண்டாகும்.

இவர்கள் ஊழியக்காரர்களை கேள்விகேட்ட மீரியாமின் குஷ்டரோகத்தை கூறி உங்களை பயமுறுத்தினாலும் பயப்படவேண்டாம்.

நீதிமானும் எச்சரிக்கப்படவேண்டியது அவசியம். அப்படி எச்சரிக்காவிட்டால் இரத்தப்பழி உங்கள்மேல் சுமரும் என்று (எசே 3:20,21) வேதம் தெளிவாக நம்மை எச்சரிக்கிறது.

பெந்தேகோஸ்தே சபையும், சபை பாஸ்டர்மார்களும் இரட்சிக்கப்படவேண்டும் என்று நான் ஜாமக்காரனில் அடிக்கடி எழுதுவது சரி என்று இப்போதாவது உணருகிறீர்களா?

பெனிஹின் மனைவியின் வக்கீல் நோட்டீஸ் அல்லது அறிவிப்பு பெனிஹினுக்கு அனுப்பும்போது விவாகரத்துக்கான காரணத்தை அந்த வக்கீல் விளக்காமல் இருப்பாரா? மனைவி விவாகரத்தின் காரணம் என்க்கு தெரியவில்லை என்று பெனிஹின் கூறியது எப்படிப்பட்ட பொய்! இதுதான் இவர் பேசும் பொய்யான அந்நியபாஷைமூலம் வரும் பொய்யான தகவலாகும். இப்படிப்பட்டவர்களின் ஆவியின் அனுபவம், பேசும் பாஷை, ஊதினால் விழுவது, கை நீட்டினால் கீழே விழுவது இவை யாவும் பிசாசின் ஆவி என்பதை ஏராளமானவர்கள் இன்னும் நம்பாதவர்களாக இருக்கிறார்களே!

அதேபோல தன் மனைவி தன்னைவிட்டு ஓடிப்போனதேன் என்று தனக்கு தெரியவில்லை என்று இவர் கூறும் கூற்றை இன்னும் பலர் நம்புகிறார்களே! ஊழியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக புருஷன்-மனைவி ஆகிய இருவரையும் மறுபடியும் ஒன்று சேர்க்க பலர் முயன்றனர். குறிப்பாக இவர்கள் பிள்ளைகள் முயன்றனர். ஆனால் முடியவில்லை.

சென்னை (அயனாவரம்) அசம்பளீஸ் ஆப் காட் சபை பாஸ்டரைவிட்டு மனைவி வெளியேறி பல மாதங்களாகிறது. பாஸ்டர்.மோகன் போன்றவர்கள் அவர்களை சேர்த்து வைக்க முயன்றனர் இயலவில்லை. ஆனால் இப்போதும் அவர் தொடர்ந்து ஆராதனை நடத்துகிறார். பரிசுத்த மேஜை(திருவிருந்து) ஆராதனையையும் நடத்துகிறார், அந்நியபாஷை பேசுகிறார், சபை மக்கள் யாவரும் ஆவியில் நிறைகிறார்கள் என்கிறார்கள். சபைமக்களும் அந்நியபாஷை பேசுகிறார்கள் – என்ன இது? எந்த ஆவி இந்த பாஸ்டர்களை நடத்துகிறது? இவர்கள் சபைமக்களை எந்த ஆவி நிறைக்கிறது.மேய்ப்பன் எவ்வழி – ஆடுகளும் அவ்வழி அல்லவா? இவர்கள் மேய்ப்பனாக தொடரவும் சபையை, சபைமக்களை நடத்தவும் அசம்பளீஸ் ஆப் காட் சபை தொடர்ந்து இவர்களை அனுமதிக்கிறது என்பது உண்மையானால் அசம்பளீஸ் ஆப் காட் சபை தலைவர்கள், அசம்பளீஸ் ஆப் காட் சபை முழுவதும் பேசும் அந்நியபாஷையும் போலி – அவர்கள் பெற்றுள்ளது பரிசுத்த ஆவியானவரும் அல்ல என்பது தெளிவாக விளங்கவில்லையா?

நம் பரிசுத்த ஆவியானவர் பிரிக்கிறவர் அல்ல – சேர்க்கிறவர். இதன் அடிப்படையில் இவர்களை நிதானியுங்கள்.

2 Responses to Today’s CSI, Paul Dinakaran, Mohan Lazarus, Benny Hinn

  1. Aanandan says:

    We should appreciate the Christian Bishop who says that Dinakaran and Mohan Lazarus are Frauds

  2. Pingback: மோகன் சி.லாசரஸ் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் மரணம். | தேவப்ரியா

Leave a comment

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே