Orphange Abducts & sells child-குழந்தைகளை கடத்தி விற்பனை: காப்பக பெண் நிர்வாகி கைது
July 21, 2010 Leave a comment
திருப்பூர், ஜூலை 18: குழந்தைகள் காப்பகம் நடத்தி ஆதரவற்ற குழந்தைகளை கேரளம் உள்பட பல்வேறு இடங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வந்ததாக பெண் நிர்வாகியை திருப்பூர் போலீஸôர் கைது செய்துள்ளனர்.
÷திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்தவர் குணசேகரன் (31). இவரது மனைவி உதயா (25). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு யுவராணி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்த உதயா, குழந்தை யுவராணியை திருப்பூர் அய்யம்பாளையத்திலுள்ள காப்பகத்தில் விட்டுவிட்டார். பிறகு, கணவனுடன் சேர்ந்து வாழத் துவங்கிய பிறகு குழந்தையை வழங்கக் கோரி குணசேகரனும், உதயாவும் காப்பக நிர்வாகி பிரபாவதி (27) என்பவரிடம் கேட்டுள்ளனர்.
÷ஆனால், அவர் குழந்தையைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததை அடுத்து உதயா திருப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் புகார் செய்தார். போலீஸôர் விசாரணை நடத்தி காப்பகத்தைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவான பிரபாவதியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸôர் நடத்திய தேடுதல் வேட்டையில் பிரபாவதி சனிக்கிழமை சிக்கினார். விசாரணையில், கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குழந்தைகளைக் கடத்தி விற்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவரை போலீஸôர் கைது செய்தனர். தவிர, பிரபாவதி கொடுத்த தகவலின்பேரில் குணசேகரன், உதயா தம்பதியின் குழந்தை கேரள மாநிலத்தில் மீட்கப்பட்டுள்ளது.
÷இதேபோன்று அந்தக் காப்பகத்தில் விடப்பட்ட பல குழந்தைகளும் கடத்தி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் போலீஸôர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, இச்சம்பவத்தை அடுத்து திருப்பூரிலுள்ள அனைத்து தனியார் காப்பகங்களிலும் போலீஸôரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை குழந்தைகள் கடத்தல் வழக்கு: போலி சான்றிகழ் வழங்கிய டாக்டர் சரண்
புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைககள் கடத்தல் வழக்கில் போலி சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி டாக்டர் நெல்லியான் போலீசில் சரண் அடைந்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைகள் கடத்தல் வழக்கில் தலைவி போல செயல்பட்டு புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த லலிதா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து புதுவை சமூக நலத்துறை அதிகாரிகள் லலிதாவின் வீட்டை சோதனை செய்த போது வித்யாபாரதி, தேவதர்ஷன் என்ற 2 குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட 2 குழந்தைகளையும் புதுவை அரியாங்குப்பம் அருகில் உள்ள இமாகுலேட் ஜாய் ஹோம் குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்தனர்.
இந்த 2 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சோதனை செய்த அதிகாரிகள் அவை போலி என்றும், அவற்றை முதலியார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வரும் டாக்டர் நெல்லியான் என்பவர் அளித்துள்ளார் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக டாக்டர் நெல்லியான், கிளினிக் மானேஜர் மதியழகன், லலிதா ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மானேஜர் மதியழகன் கைது செய்யப்பட்டார். டாக்டர் நெல்லியான் தலைமறைவாகிவிட்டார்.
இந் நிலையில் நெல்லியான் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
உடனே நெஞ்சு வலி!
சரணடைந்த பின்னர் உடனடியாக டாக்டர் நெல்லியானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அனுமதிக்கப்பட்டார்
http://www.dailythanthi.com/article.asp?NewsID=581683&disdate=7/21/2010
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=10955&id1=4