டொனேஷன் கொடுத்தால்தான் சீட் கிடைக்கும்-D.G.Sதினகரன் காருண்யா கல்லூரி
June 18, 2010 2 Comments
எமில் ஜெபசிங்
அடுத்த சம்பவம் எமில் அவர்கள் FMPBயை விட்டுவிலகி விஷ்வவாணியில் சேர்ந்தபின் சொந்த வாழ்க்கையில் தான்பெற்ற மகள் படிப்பின் விஷயமாக பெரிய சோதனையை சந்திக்க நேர்ந்தது. மகள் தன் படிப்பில் நல்ல மார்க்குடன் வெற்றி பெற்ற நேரம் அது. அவள் தான் ஒரு இன்ஜினியர் பட்டதாரியாக படிக்க விருப்பம்கொண்டார். அந்தநாளில் சகோ.DGS.தினகரன் அவர்களின் பிரசங்கத்தை ஹிந்தியில் மொழிபெயர்ப்புடன் தயாரித்து வடஇந்தியா முழுவதும் எமில் அவர்கள் கேட்கசெய்தார்.
வானொலியில் செய்தியை முதன்முதல் மொழிபெயர்ப்பில் தயாரித்து வெளியிட்ட சிறப்பு எமிலையே சேரும். இதன்மூலம் சகோ.தினகரன் வடஇந்தியா முழுவதும் அறியப்பட்டார். இதன்பிறகுதான் வடஇந்திய வாசல் அவருக்கு திறக்கப்பட்டது. ஆகவே அந்த பழக்கத்தில் சகோ.தினகரனிடம் தன் மகளுக்கு காருண்யாவில்படிக்க ஒரு சீட் கேட்டார். அவரும் தருவதாக வாக்களித்தார், ஆனால் டொனேஷன் கொடுத்தால்தான் சீட் கிடைக்கும் என்று காருண்யா கல்லூரி அறிவித்துவிட்டது. மகள் பெரிய எதிர்ப்பார்ப்புடன் காருண்யாவில் இடம் கிடைக்கும் என்று தன் சிநேகிதிகளுகெல்லாம் அறிவித்து ஆவலுடன் காத்திருந்த அவளுக்கு காருண்யாவில் பணம் கொடுக்காமல் இடமில்லை என்று கல்லூரி பொறுப்பாளர் நேரில் அவர்களுடன் அறிவித்தபின் மகள் மனம்நொடிந்து மனநிலை பாதிக்குமளவு சேர்ந்துப்போனாள். ஒரு மிஷனரி ஊழியக்காரரின் மகளுக்கு அதுவும் தன் ஊழியத்துக்கு பெரியளவில் உதவிசெய்தவரின் மகளுக்கு காருண்யாவில் ஒரு சீட் கொடுக்க மிஷனரி பணிசெய்யும் சகோ.எமிலிடம் பணம் கேட்ட செய்தி அனைத்து விசுவாசிகளுக்கும், ஊழியர்களுக்கும் சகோ.தினகரன்மேல் பெரும் வெறுப்பை உண்டாக்கியது.
ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரியை ஆரம்பிக்க கடவுள் சொன்னார் என்று சகோ.தினகரன் அவர்கள் பொய் சொல்லி ஆண்டவரின் மனதையும் வேதனைப்படுத்திவிட்டார். ஆனால் கர்த்தரோ சகோ.எமில் மகளை கைவிடவில்லை. மகளுக்கு வெல்லூர் CMC மெடிக்கல் காலேஜில் MBBSபடிப்புக்கு இடம் கிடைக்கசெய்து இப்போது படிப்பை முடித்து மேல்படிப்பையும் முடிக்க கர்த்தர் கிருபை செய்தார் என்று கேள்விப்பட்டு தேவனைத் துதிக்கிறேன்.
Let us all Thank Jamakkaran for Exposing.
What is Tamilnadu Educational Department do after this Open Expose?
Tamil nadu government must act against this solid proof