சிறுமியிடம் பாலியல் தொல்லை- மதபோதகர் ராஜ்ஜோசை கைது
May 26, 2010 Leave a comment
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=6786
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே குழந்தைகள் காப்பக சிறுமியிடம் தவராக நடக்க முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குலசேகரம் பகுதியை சேர்ந்த ராஜ்ஜோஸ் (56). மதபோதகரான இவர் தென்தாமரைகுளம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 6 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவரின் 9 வயது மகள் இந்த காப்பகத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 20ம் தேதி காப்பகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற ராஜ்ஜோஸ் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயிடம் ராஜ்ஜோஸ் நடந்து கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் ஜீவராணி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி சப் இன்ஸ்பெக்டர் ராஜப்பன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடந்தி மதபோதகர் ராஜ்ஜோசை கைது செய்தார்.