பாதிரியார் -குண்டர் சட்டத்தில் கைது
May 24, 2010 Leave a comment
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=5550
கோவை: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த பாதிரியாரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி.,சிவனாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக தகவல் வந்ததால், கிருஷ்ணகிரி எஸ்.பி., பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கும்பலை தேடும் பணி துவங்கியது. அதன்முடிவில் பெரம்பலூர் அருகே உள்ள பனப்பை என்ற இடத்தை சேர்ந்த பாதிரியார் சேவியர்அல்போன்சா கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து விசாரித்தபோது செஞ்சி அருகேயுள்ள தேவனாம்பட்டு பகுதியை சேர்ந்த மேரி மணி தம்பதியருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு, சிறுவன் தேவாவை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அதையடுத்து சிறுவன் மீட்கப்பட்டான். குழந்தை கடத்திய பாதிரியாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.