கேளம்பாக்கம் அருகே சிறுவனை கொன்றதாக பாதிரியார் கைது
October 17, 2009 Leave a comment
கேளம்பாக்கம் அருகே சிறுவனை கொன்றதாக
பாதிரியார் கைது
மாமல்லபுரம், ஏப்.20_
http://www.thinaboomi.com/apr20/19raj4.htm
கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷ் (12) கொலை வழக்கில் புதிய திருப்பமாக கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:_
கேளம்பாக்கம் போலீஸ் சரகம் தையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவரது மகன் சந்தோஷ் (12) இச்சிறுவன் கோவளம் செயின்ட் ஜோசப் பள்ளியில் 5_ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த புனித வெள்ளியன்று சில பெண்கள் அந்த பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரை தேடி வந்ததாகவும் அருகில் நின்ற சிறுவனிடம் வழி கேட்டபோது சிறுவன் சந்தோஷ் அவர்களை ஸ்டீபன் என்ற பாதிரியார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு சிறுவன் சந்தோஷ் வீடு திரும்பாத காரணத்தால் சிறுவனை தேடியலைந்த அவனது பெற்றோர்களும், உறவினர்களும் சாத்தான்குப்பம் என்ற இடத்தில் உள்ள ஒரு கிணற்றில் சந்தோஷ் காயங்களுடன் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சந்தோஷ் பெற்றோர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் சிறுவன் சில பெண்களை பாதிரியார் ஸ்டீபன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற விபரம் தெரிய வந்தது.
இதையடுத்து ஸ்டீபனை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக பாதிரியாரின் நண்பரும், அவரிடம் உதவி பாதிரியாராக இருந்து வந்த தையூர் கிராமத்தைச் சேர்ந்த டி.பி.ஆர். சீதாராமன் என்பவரது மகனான தவசுதன் (25) என்பவன் சிறுவனை கொலை செய்தான் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தன்று தன்னை தேடி வந்த இரால் பண்ணையைச் சேர்ந்த 9 பெண்களையும், தன்னிடம் அழைத்து வராமல் தன் நண்பனான ஸ்டீபனிடம் அழைத்துச் சென்றுவிட்டான் என்ற ஆத்திரத்திலேயே அவனை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளான்.
சம்பவத்தன்று தவசுதனும் சந்தோஷின் உறவுக்கார பெண்ணும் உல்லாசமாக இருந்ததை சந்தோஷ் பார்த்து விட்டதாகவும் இதை சிறுவன் வெளியில் சொல்லி விடுவான் என்று பயந்த தவசுதனும் அந்த பெண்ணும் சேர்ந்து சிறுவனை தரையில் தலையை பிடித்து அடித்து வீசி கொலை செய்து பின்னர் பிணத்தை கிணற்றில் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிரியார் மற்றும் தவசுதனை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திமன்ற அனுமதியுடன் பாதிரியார், தவசுதனிடம் விசாரணை மேற்கொண்டபின் சிறுவன் கொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.