கிருஷ்ணகிரி: பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்

பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் கற்பழிப்பு புகார்

கிருஷ்ணகிரி: இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த புகாரில் சிக்கிய பாதிரியார் மீது, மற்றொரு பெண்ணும் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி கந்திகுப்பம் மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் பாதிரியார் குமார்(40). போச்சம்பள்ளியில் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். சின்னகுத்த குளத்தைச் சேர்ந்த தமயந்தி(24) என்பவரை, கடத்திச் சென்று கற்பழித்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாதிரியார் தன்னை கற்பழித்து விட்டதாக மற்றொரு இளம்பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார்.

பாலக்கோடு அனுமந்தபுரம் ராஜா மகள் சுஜிதா(18) கூறியதாவது: அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2004ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது, எங்கள் பகுதிக்கு வந்த பாதிரியார் குமார், தான் பணக்காரராக இருப்பதால், ஏழை பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி எங்கள் குடும்பத்தில் பெண் கேட்டார். பெண் கொடுக்க மறுக்கவே, நான் பள்ளி விட்டு வந்த போது காரில் கடத்திச் சென்று, தனி அறையில் அடைத்து கற்பழித்தார்.

நடந்தவற்றை கூறி பெற்றோரை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் குடி அமர்த்தினார். என்னை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். படுக்கையறையில் மட்டும் மனைவியாக ஏற்றுக்கொண்ட அவர், வெளி ஆட்களிடம், “வீட்டில் வேலை செய்யும் பெண்’ என்று கூறி வந்தார். சென்னையில் இருந்த போது மூன்று முறை நான் கர்ப்பம் அடைந்தேன்; கர்ப்பத்தை கலைத்து விட்டார். பாதிரியார் குமார், பெங்களூருவில் சோபியா என்பவருடனும், சென்னையில் ராணி, இந்திரா ஆகியோருடனும், கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளியைச் சேர்ந்த ஒரு பெண் என நான்கு பேரை திருமணம் செய்துள்ளார்.

இரவில் பல ஆண்கள் மற்றும் பெண்களுடன் வீட்டுக்கு வரும் குமார், என்னை குளியலறையில் வைத்து பூட்டி விட்டு உல்லாசமாக இருப்பார். கடந்த ஜனவரி மாதம் குமார் என்னை மருதேப்பள்ளிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்த எனது தாய், தந்தையிடம் நடந்தவற்றை கூறி நான் அவர்களோடு சென்றுவிட்டேன். எனது வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது என்று நினைத்திருந்தேன். பாதிரியார் குமார், தமயந்தி என்பவரை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை படித்தவுடன், “என் போன்று வேறு எந்த பெண்ணும் ஏமாறக் கூடாது’ என்ற நோக்கில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு சுஜிதா கூறினார்.

Leave a comment

HINDUISM AND SANATAN DHARMA

Hinduism,Cosmos ,Sanatan Dharma.Ancient Hinduism science.

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Dwindling In Unbelief

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Larry Hurtado's Blog

Comments on the New Testament and Early Christianity (and related matters)

TaborBlog

Religion Matters from the Bible to the Modern World

தமிழன்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

இறையில்லா இஸ்லாம்

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

Devapriyaji - True History Analaysed

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

வரலாற்று உண்மைகளை அலசுவோமே

கிறிஸ்தவம் உள்ளபடியே

உண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்

Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)

வரலாற்று உண்மைகளை அலசுவோமே