தலித் மக்கள் உரிமையைப் பிடுங்கும் கிறிஸ்துவ மோசடி அக்கிரமம்
July 30, 2010 1 Comment
சென்னை, ஜூலை 24, 2010: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ இந்திய ஆட்சிப் பணியில் சேருவதற்காக தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதன் அடிப்படையிலும் அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டன.
அவற்றின் அடிப்படையிலும் அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலும் அவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொது நலனுக்கு உகந்தது அல்ல.
இது தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதால் அரசால் உமாசங்கர் தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HC nullifies MP’s election for fake caste certificate [ Date : Jul 26th, 2010 ]
In a noteworthy verdict made today, High Court nullified election of Kodikkunnil Suresh of Congress to Lok Sabha. The Court in its ruling, told that Suresh, a Christian convert and five-time MP, who now represents Mavellikara (Reserved) constituency, was not qualified to represent the constituency. Justice Sasidharan Nambiar pronounced the verdict on three appeals filed by the leader’s counterpart in the then election R.S Anil and other two.
The Court verified the caste certificate produced by Suresh and observed it unreliable and fake, and that was not adequate to prove his right to contest from a reserved constituency. It also pointed out that his statements recorded at different times conveyed contradiction and hence ruled out is stating deceitful.
உமாசங்கர் சஸ்பெண்ட் ஏன்? அரசு விளக்கம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56378
சென்னை: “புகாரின் அடிப்படையில் நடந்த பூர்வாங்க விசாரணையில், அடிப்படை முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. ஒழுங்கு நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படாமலிருக்க, உமாசங்கர் “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்’ என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: “போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தார்’ என்ற புகாரின் பேரில் “சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஆதரவாக, சில அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிடுகின்றன. “தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை, தவறான சான்று கொடுத்து தட்டிப் பறித்து விட்டார்’ என்ற புகாரின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. “பழிவாங்கும் நடவடிக்கை’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் தான் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் விசாரணை மேற்கொண்டு, ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது; நல்ல பதவிகளில் அமர்த்தப்பட்டார். முறையான மூன்று அதிகாரிகளால் இவர் மீதான புகார் விசாரிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவே, “சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்; இது தண்டனையல்ல, இறுதியான நடவடிக்கை அல்ல. விசாரணை முடிவில் தான், புகாரின் மீதான இறுதி முடிவு தெரியவரும். இதுகுறித்து தவறான கருத்தை வெளியிடுவது சட்டப்படி நியாயமான விசாரணைக்கு உதவாது. இவ்வாறு அரசு விளக்கமளித்துள்ளது.