கூடங்குளம் அணு உலை எதிர் தூத்துக்குடி கிறிஸ்தவ நிறுவனங்கள் 54 கோடி ரூபாய் நன்கொடை
January 18, 2012 4 Comments
Team lands in Kudankulam to probe NGOs
Tuticorin church NGO got 54 Crore to stop Kudankualm
Karthick S, TNN | Jan 18, 2012, 09.15AM IST
“Two NGOs run by Tuticorin Archbishop Evan Ambrose received Rs 54 crore in recent months from foreign countries, including the US. We have directed them to submit proper documents. The documents submitted by them were not adequate. So we have sent a special team for a thorough investigation. This is the third round of probe,” a senior officer in the home ministry said.
An NGO, said to be run by M Pushparayan, organiser of the agitation against the nuclear project, also got funds from other countries, home ministry sources said. The ministry had directed these NGOs to submit documents under the Foreign Contribution Regulation Act. The ministry, sources said, was not fully satisfied with the documents submitted by them. “If the ministry is not satisfied with the documents, these NGOs would face stringent action,” said Union minister of state in the Prime Minister’s Office M Narayanasamy.
The Centre has alleged that foreign funds are being used to fuel the anti-nuclear protests in the Kudankulam. The special team has been in Kudankulam for more than three days and is said to have verified the documents submitted by the NGOs. “The special team was careful not to involve in anyone from the local units. The investigation will conclude on Tuesday. The team will submit reports to the home ministry soon,” the source said.

Dismissing the allegations, Tuticorin Archbishop Evan Ambrose told TOI, “We have been submitting audit reports to the home ministry every year. The special team has sought some clarifications and we are co-operating with them. There is nothing to hide.” Pushparayan alleged that Centre was trying to spread the news that foreign funds are being diverted to keep the protests going. “The home ministry has sent a notice to our NGO last month and we have submitted all the documents they sought. They seemed satisfied with the particulars,” he said.
S P Udayakumar, convener of the People’s Movement Against Nuclear Energy, said, “This is an intimidating exercise by the government. They are abusing the state power. It clearly shows that they don’t believe in democracy. I can assure that we haven’t got a penny from any body.”




Pingback: கிறிஸ்தவம் பலானது
அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களில், இரண்டாம் நாளாக நேற்றும், ரெய்டு தொடர்ந்தது. வெளிநாட்டு பணத்திற்கு
முறையான ஆவணங்கள் தராததால், விசாரணை தொடர்வதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரெய்டு, இன்றும் தொடர்கிறது.
புகார் : கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, உதயகுமார் என்பவர் தலைமையில், ஒரு குழு போராட்டம் நடத்துகிறது; கடந்த நான்கு மாதங்களாக, தொடர் போராட்டம் நடக்கிறது. போராட்டத்திற்கு, வெளிநாட்டு சக்திகள்
துணை போவதாக, புகார்கள் எழுந்தன. வெளிநாட்டிலிருந்து அவர்களுக்கு பணம் வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி புகார் கூறியிருந்தார். இந்நிலையில், அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் குறித்து, மத்திய உள்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர், இவான் அம்ப்ரோஸ் தலைமையில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும், விசாரணை நடந்தது.
தூத்துக்குடியில், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி, மக்கள் கரங்கள், கடலோர மக்கள் கூட்டமைப்பு மற்றும் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் செயல்படுவதை, உள்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில், சில நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து, 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததாக, உள்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதை உறுதி செய்யும் வகையில், தொண்டு நிறுவனங்களில் விசாரணை நடத்த, மத்திய உள்துறை மற்றும் நிதித் துறை அதிகாரிகள், கடந்த, 10ம் தேதி, தூத்துக்குடி வந்தனர். ஒரு வாரமாக, தொண்டு நிறுவன நடவடிக்கைகளை, கியூ பிரிவு போலீசார் உதவியுடன், ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து, இரவு வரை, இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவன ஊழியர்களிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்; நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
சரியான ஆவணங்கள் தரவில்லை : இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: எங்களுக்கு வந்த புகார்களின் படி, நன்கொடை என்ற பெயரில், வெளிநாட்டு பணத்தைப் பெற்று, அதன்மூலம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்த புகாரின் உண்மைத்தன்மை குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
ஆயர் இவான் அம்ப்ரோஸ் மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடம், அவர்களுக்கு வந்த பணத்தை, செலவு செய்ததற்குரிய முறையான ஆதாரங்களை கேட்டுள்ளோம். அவர்களால், சரியான ஆவணங்கள் இதுவரை தர முடியவில்லை. அதனால், விசாரணை தொடர்கிறது. ஆதாரம் கொடுத்தால், உடனடியாக விசாரணை முடிக்கப்படும்; இல்லையெனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்போம். விசாரணை விவரங்களை, ஒரு வாரத்திற்குள், மத்திய அரசுக்கு அறிக்கையாக தருவோம். அந்த அறிக்கையின் பரிந்துரைப்படி, தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நடவடிக்கை : “ரெய்டு’ குறித்து, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டபோது, “உள்துறைக்கு வந்த புகார்களின் படி, அந்தத் துறையினர் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை அறிக்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்வர். பின்னர் நடவடிக்கை இருக்கும்’ என்றார்.
அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறப்படவில்லை : தூத்துக்குடி ஆயர் விளக்கம் : “” கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை,”என, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். அவரது விளக்க அறிக்கை: கடந்த, 2011, நவம்பரில், மத்திய உள்துறை அமைச்சகம், தூத்துக்குடி மறைமாவட்ட அமைப்புகள், கடந்த ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதி சம்மந்தமாக எழுப்பிய, 32 கேள்விகளுக்கு, டிசம்பர் 2, 2011க்குள் பதில் அனுப்ப கேட்டுக் கொண்டது. முறைப்படியாக அவைகள் அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, இம்மாதம், 10ம் தேதி முதல், 13ம் தேதிவரை,
மறைமாவட்ட அலுவலகத்திலும், 16ம் தேதி முதல், 19ம்தேதி வரை, தூத்துக்குடி சமூகசேவை அலுவலகத்திலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இருவர், களஆய்வு மேற்கொள்வதாக முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு, தற்போது அது முறையாக நடந்து கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக வெளிநாடுகளிலிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து பிற திட்டங்களுக்காக பெறப்பட்ட எந்த நிதியும், கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு பிரசாரத்திற்காக பயன்படுத்தப் படவில்லை என்பதை, நாட்டுமக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய, விஷம பிரசாரத்தில் ஈடுபடுகிற செய்தித்தாள்களையும், தொலைக்காட்சி ஊடகங்களையும், தனிநபர்களையும், இயக்கங்களையும் வன்மையாக கண்டிப்பதோடு, அனைத்தையும் சட்டப்பூர்வமாக சந்திக்க நான் தயாராக உள்ளேன் . கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம், முழுக்க முழுக்க மக்களே முன்நின்று எடுத்து நடத்தும் போராட்டம். அதற்கு தேவையான நிதி ஆதாரத்தை அவர்களே உருவாக்கி கண்காணித்து நடத்துகின்றனர் என்பதையும், மீண்டும் அனைவருக்கும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், தூத்துக்குடி மல்டி பர்ப்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி நிறுவனம் சார்பில், வெளிநாட்டு நிதியுதவியில், தாளமுத்து நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு, கழிவறை கட்டி கொடுத்துள்ளதாக, கணக்கு காட்டியுள்ளனர். அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரித்தனர். இதேபோல், முத்துக்குவியல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு செய்த உதவிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
-நமது சிறப்பு நிருபர்-
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=388238
“தினமலம்’ செய்தியை யாரும், “சீரியசாக’ எடுத்துக் கொள்ள மாட்டார்கள்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=388250
தமிழக தொழில் துறைகள் நசிந்து போகும் அளவு, மின் பிரச்னை இங்கே தலைவிரித்தாடுகையில், மின் தேவையை பூர்த்தி செய்ய உதவும், கூடங்குளம் அணு உலையை செயல்பட விடாமல், சிலர் தடுக்கின்றனர். இந்த எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து, 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததைக் கண்டுபிடித்துள்ளதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். இச்செய்தி, “தினமலர்’ நாளிதழில் வெளியானது.
இச்செய்தியை யாரும், “சீரியசாக’ எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறும், அணு எதிர்ப்பாளர்களின் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உதயகுமார், “தினமலர்’ நாளிதழுக்கு, ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையற்ற, ரசனையற்ற, யோக்கியமற்ற செய்திகளை வெளியிடும், “தினமலம்’ கருத்துத்தாளை (வியூஸ்பேப்பர்), அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டிக்கிறது. கொள்கையற்ற, ஒழுக்கமற்ற, பத்திரிகை தர்மம் அற்ற இந்த மஞ்சள் பத்திரிகை, தமிழ் மக்களின் உரிமைக்கும், மதிப்புக்கும் எதிராக செயல்படுகிறது. “அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம் வந்தது எப்படி?’ என்ற தலைப்பில், இந்த, உபயோகமற்ற, கருத்துத்தாள், செய்தி வெளியிட்டுள்ளது. அதில், எங்களுடன் தொடர்பு வைத்துள்ள சில கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் நிதி உதவி வந்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த, மூளையற்ற, முதுகெலும்பற்ற, “வியூஸ்பேப்பர்’ அசிங்கமான, அபத்தமான கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரம் எதுவும் தரவில்லை. அறிவுள்ள, பண்புள்ள எவரும், இந்த, நாற்றமெடுக்கும் பத்திரிகை செய்தியை, “சீரியசாக’ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எங்கள் இயக்கத்தின், மூன்று முக்கிய இயக்கவாதிகளின் வீட்டு முகவரி, வீட்டு தொலைபேசி எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை, 2011, நவம்பர் 24ம் தேதி, இந்தப் பத்திரிகை, முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது. இதன் மூலம், இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்கள் வீட்டு உறுப்பினர்களையும் தொந்தரவு செய்து, மிரட்டுவதற்காக தன் வாசகர்களைத் தூண்டிவிட்டுள்ளது. இதை எதிர்த்து, பிரெஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மாநில மனித உரிமை கமிஷன் மற்றும் தேசிய மனித உரிமை கமிஷன் ஆகியவற்றிடம், இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்து, இந்த நாளிதழ் செய்திகளை தினமும், “எடிட்’ செய்து, அச்சிட்டு, வெளியிடுவோர் மீது, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இப்போது, இந்த நாளிதழ், புகழ் பெற்ற கிறிஸ்துவ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு, மேலும் விஷத்தைக் கக்கி, வாந்தி எடுத்துள்ளது. இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரின் இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ளது. வெட்கமற்ற, சர்ச்சைக்குரிய, இந்த பத்திரிகை நிறுவனம், மனசாட்சி இன்றி, வேறு சிலரின் தூண்டுதல் பேரிலும், லாப நோக்கத்திலும் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், உரிமைகளையும் அவமதிக்கும் இந்த, “தினமலத்தை’ நாங்கள் கண்டிக்கிறோம். கிறிஸ்துவர்கள், அவர்களின் இயக்கங்கள், மற்ற சிறுபான்மை மதத்தினரின் நலனுக்கு எதிராகச் செயல்படும், இந்த, “தினமலத்தின்’ எதேச்சாதிகாரப் போக்கையும் நாங்கள் கண்டிக்கிறோம். அணுசக்தி போன்ற அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த பத்திரிகையின் வெளியீடுகளை, தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்குமாறு கோருகிறோம். இந்த, “தினமலத்தை’ போல அல்லாமல், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஒரு சில காந்தீயக் கொள்கைகளுடன் இயங்கி வருகிறது. எந்த இந்திய அல்லது சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த நிதியும் வாங்கவில்லை.
- போராட்டக் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம். இவ்வாறு அந்த இ-மெயிலில் எழுதப்பட்டுள்ளது.
உதயகுமாரிடம் பேச விரும்புவோர், அவரின், “மொபைல்’ எண்: 98656-83735, 98421-54073, மற்றும் “இ-மெயில்’ முகவரி: koodankulam@yahoo.com யில் தொடர்பு கொள்ளலாம்.
People like Udayakumar is a threat to our country.He should be treated like a terrorist.He should not be allowed to exercise fundamental rights.He should be punished for treason and put in to the jail for the rest of his life.